தேப்பெருமாநல்லூர் விஸ்வநாத சுவாமி கோவில்

தேப்பெருமாநல்லூர் விஸ்வநாத சுவாமி கோவில்

இடுப்புக்குக் கீழே இடக்கையை ஒய்யாரமாக வைத்துக்கொண்டு, ஆணவத்தோடு நிற்கும் சனி பகவான்

தஞ்சாவூர் கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலிலிறந்து ஒரு கி.மீ. தூரத்தில் உள்ளது தேப்பெருமாநல்லூர். இத்தலத்து இறைவன் திருநாமம் விஸ்வநாத சுவாமி. இறைவியின் திருநாமம் வேதாந்தநாயகி.

இத்தலத்தில் அம்பிகை சன்னதியின் எதிரில் மகாபைரவர் என்ற பெயரில் ஐந்தடி உயர திருமேனியுடனும், சாந்த பைரவர் என்ற பெயரில் சிறிய உருவத்துடனும் இரண்டு பைரவர்கள் எழுந்தருளி இருக்கிறார்கள். பைரவர் சந்நிதிக்குப் பக்கத்தில் சனி பகவான் காக்கை வாகனத்துடன், இடுப்புக்குக் கீழே இடக்கையை வைத்தபடி ஒய்யாரமாக, ஈஸ்வரனையே பிடித்துவிட்டேன் என்ற அகந்தையுடன் இறைவனைப் பார்த்த வண்ணம் நிற்கும் கோலத்தில் காட்சி தருகிறார். இப்படி இவர் நிற்பதற்கு பின்னணியில் ஒரு சுவையான நிகழ்ச்சி உள்ளது.

ஒரு சமயம் சனி பகவான் சிவபெருமானைப் பிடிப்பதற்குரிய நேரம் நெருங்கி விட்டதால், அம்பாளிடம் சென்று, நாளை காலை ஏழேகால் நாழிகைப்பொழுது சிவபெருமானைப் பிடிக்கப் போகிறேன் என்று சொன்னார். அதைக் கேட்டுக் கோபம் கொண்டாள் அம்பாள். எப்படியும் சிவபெருமானை ஏழேகால் நாழிகை பிடித்து தன் வேலையை ஒழுங்காகச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், மறுநாள் சிவபெருமானைப் பிடிக்க சனிபகவான் மெதுவாக வந்தார். அப்போது அன்னை. சிவபெருமானைப் பக்கத்திலிருந்த அரச மரத்தின் பின்னால் ஒளிந்து கொள்ளச் சொன்னாள். சிவபெருமானும் அப்படியே செய்தார். அங்கு வந்த சனி பகவான அம்பாள் அரச மரத்தடியில் நிற்பதைப் பார்த்து சிவபெருமான் எங்கே இருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டார். அதனால் அரச மரத்தைப் பார்த்த வண்ணம் அங்கேயே நின்று விட்டார் சனிபகவான். ஏழேகால் நாழிகை கழிந்ததும் சனிபகவான் அங்கிருந்து மெதுவாக நகரத் தொடங்கினார். அப்போது அம்பாள் சனி பகவானைப் பார்த்து என்ன, ஈஸ்வரனைப் பிடிக்க முடியாமல் தோல்வி அடைந்து திரும்பிச் செல்கிறாயா? என்று கேட்டாள். அதற்கு சனிபகவான் நான் வந்த வேலை வெற்றிகரமாக முடிந்துவிட்டது. இறைவனே அரச மரத்தின் பின்பக்கம் ஒளிந்திருக்க வேண்டியிருந்தது அல்லவா? அதுவே நான் அவரை பிடித்த நேரம் என்று ஆணவத்துடன் சொன்னான். அதுமட்டுமில்லாது இடுப்பில் கைவைத்து சற்று ஒய்யாரமாக அம்பிகை முன் நின்றான்.

சனி சொல்வதைக் கேட்டுக கொண்டிந்த சிவபெருமான் அரச மரத்தின் பின்புறத்திலிருந்து கோபத்தோடு வெளிப்பட்டு, மகாமந்திர பைரவர் அவதாரம் எடுத்து சனி பகவானை இரண்டாகக் கிழித்தார். இரண்டாகக் கிழிக்கப்பட்ட சனி பகவான சிவபெருமானை நோக்கி, ஈஸ்வரா! தாங்கள் வகுத்துக் கொடுத்த சட்டப்படி நான் இயங்குகிறேன். நான் இல்லையேல், உலகில் ஆணவக்காரர்களும், அக்கிரமம் செய்பவர்களும் பெருகி விடுவார்கள். எனவே ஆணவத்தோடு நான் நடந்து கொண்டதற்காக என்னை மன்னித்து, மீண்டும் முன்புபோல் செயல்பட அருள்புரிய வேண்டும் என வேண்டினார். அவர் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான இரண்டு கூரான உடலை ஒன்று சேர்த்து அருள்புரிந்தார். இவ்வாறு ஆணவம் நீங்கிய இந்த சனி பகவானை வணங்கினால் சனி தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.

Read More
தேப்பெருமாநல்லூர் விசுவநாத சுவாமி கோவில்
விநாயகர், Vinayagar Alaya Thuligal விநாயகர், Vinayagar Alaya Thuligal

தேப்பெருமாநல்லூர் விசுவநாத சுவாமி கோவில்

கபால மாலையும், ஒட்டியாணமும் அணிந்த கபால கணபதி

கும்பகோணத்திற்கு அருகே, சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில், திருவிடைமருதூர் அருகே உள்ள தலம் தேப்பெருமாநல்லூர். இறைவன் திருநாமம் விசுவநாத சுவாமி. இறைவியின் திருநாமம் வேதாந்த நாயகி. இக்கோவில் சுமார் 5000 ஆண்டுகள் பழமையானதாகும்.

இக்கோவிலின் கன்னி மூலையில், தனி சன்னிதியில் கபால கணபதி எழுந்தருளியுள்ளார் . இவர் கழுத்தில் மண்டையோடுகள் மாலையாக அணி செய்கின்றன. இந்த கபால கணபதியின் கண்கள் யானை முகத்திற்கு உள்ளது போல் முகத்தின் பக்கவாட்டில் இல்லாமல், மனிதர்களுக்கு இருப்பது போல் முகத்தின் நடுவில் உள்ளது. மேலும், இவரது கை, கால் விரல்கள் மனித விரல்களைப் போல் நீண்டுள்ளது. மனிதனுக்குத் தெரிவது போல், இவர் உடலில் நரம்புகள் தெரிகின்றன. இடுப்பில் கபால மாலையை அணிந்திருக்கிறார்.

ஒரு மகா பிரளய காலத்தில், இந்தப் பூவுலகமே நீரில் அமிழ்ந்தபோது, இத்தலம் மட்டும் மூழ்காமல் வெளியே தெரிந்தது. இதனைக் கண்டு திகைத்த நான்முகன், தன் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள விநாயகரை தியானித்தார். அவர் முன் தோன்றிய விநாயகர், இத்தலம் புனிதமானது. இங்கே சிவபெருமான் எழுந்தருளப்போகிறார். மறுபிறவி இல்லாத புனிதருக்குதான் இத்தல ஈசனை வழிபடும் பாக்கியம் கிட்டும். ஈசனுடன், அன்னையும் நானும் இத்தலத்தில் எழுந்தருள்வோம். அப்போது என் கண்கள், மனித கண்கள் போல நேராகக் காட்சி தரும்; என் நகங்கள், நரம்புகள் எல்லாம் மனித உறுப்புகள் போலவே இருக்கும். அந்த வேளையில் அஷ்டதிக் பாலகர்களை மண்டை ஓடு மாலைகளாக மாற்றி, என் இடுப்பில் ஒட்டியாணமாக அணிவேன். என்னை வழிபடுபவர்களுக்கு அவர்கள் செய்த பாவங்களை நிவர்த்தி செய்து சகல பாக்கியங்களையும் அளிப்பேன் என்று திருவாய் மலர்ந்தருளினார். இந்த கபால விநாயகருக்கு சந்தன அபிஷேகம் செய்யும் போது, அவரது இடுப்பில் உள்ள கபால ஒட்டியாணத்தை தரிசிக்கலாம்.

இவரை வழிபட சகல பாவங்களும் நீங்கி, எடுத்த காரியம் முழு வெற்றி பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்

1. பழைய சோற்றை நிவேதனமாக ஏற்றுக் கொள்ளும் அன்னதான தட்சிணாமூர்த்தி 

https://www.alayathuligal.com/blog/8b87el97d7m4g5rnrjpx7l82wtsxy2-gcz2h

2. நந்தியெம்பெருமான் வலதுக்காது மடங்கி இருக்கும் அபூர்வத் தோற்றம்

https://www.alayathuligal.com/blog/8b87el97d7m4g5rnrjpx7l82wtsxy2

3. சிவபெருமானுக்கு ருத்ராட்ச மணி கவசம் சாத்தப்படும் தலம்

https://www.alayathuligal.com/blog/lc5e8xag9et35fe4jwj8llpwtt9f85

Read More
விசுவநாத சுவாமி கோவில்

விசுவநாத சுவாமி கோவில்

சிவபெருமானுக்கு ருத்ராட்ச மணி கவசம் சாத்தப்படும் தலம்

கும்பகோணத்திற்கு அருகே, சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேப்பெருமாநல்லூரில் வேதாந்த நாயகி சமேத விசுவநாத சுவாமி அருள்புரிகிறார். இவரை வணங்குவோருக்கு மறுபிறவி இல்லை என்று சொல்லப் படுகிறது.

இத்தலத்து இறைவனின் சிவலிங்கத் திருமேனிக்கு, இருபத்தியிரண்டாயிரம் ருத்ராட்ச மணிகளைக் கொண்டு ஆவுடை, பாணம், நாக படம் அமைத்து கவசமிடப்படுகிறது. ருத்ராட்ச கவசத்தை பிரதோஷம், சிவராத்திரி, மாத சிவராத்திரி மற்றும் சிவனுக்குரிய சிறப்பு நாட்களில் அணிவிக்கிறார்கள். இதுபோன்ற ருத்ராட்ச கவசம் அணிந்த மேனி உள்ள இறைவனை வேறு எங்கும் தரிசிக்க முடியாது.

இங்குள்ள நவகிரகங்கள் அனைத்தும் நடுவில் உள்ள சூரியனை நோக்கியே உள்ளன.

Read More