திருமலை வையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருமலை வையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில்

கையில் செங்கோலுடன் ராஜ கோலத்தில் காட்சி தரும் பெருமாள்

தென்திருப்பதி என்று அழைக்கப்படும் தலம்

சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டை தாண்டி வரும் படாளம் கூட்டு ரோடில் இருந்து வேடந்தாங்கம் செல்லும் வழியில், நாலு கி.மீ தொலைவில் இருக்கிறது திருமலை வையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில். இந்த மலைக்கோயிலுக்கு செல்ல சாலை வசதியும் உண்டு.

தென்திருப்பதி என்று அழைக்கப்படும் இத்தலம், திருப்பதியில் உள்ளது போல் அமைப்பும் பூஜை முறைகளும் கொண்ட கோவிலாகும்.

மூலவர் பிரசன்ன வெங்கடேசர் பெருமாள், செங்கோலுடன் ராஜ கோலத்தில் காட்சி தருகிறார் . தன் இரு மார்பிலும் இரண்டு மஹாலக்ஷ்மியை ஏந்தியுள்ளார், திருவாசியில் ஆதிசேஷன் இருக்கிறார். .பெருமாள் அஷ்டலக்ஷ்மி ,தசாவதார ஒட்டியாணம் ,சகஸ்ரநாம மாலைகள் அணிந்து மிகவும் அழகாக காட்சி தருகிறார். வியாழன் தோறும் இவைகள் எதுவும் அணியாமல் திருப்பதியில் உள்ளது போல் நேத்திர தரிசனம் தருகிறார் .

தொண்டைமான் மன்னன் ஒருவர், தனக்கு வெற்றி தேடித் தந்த பெருமாளுக்கு நன்றி சொன்னார். அப்போது இம் மலையில், பெருமாள் கையில் செங்கோலுடன் மன்னரின் மனதில் காட்சி கொடுத்தார். அவ்வாறு தன் மனதில் வந்து காட்சி கொடுத்ததால், அவருக்கு பிரசன்ன வெங்கடேசர் என்ற பெயர் வைத்து இதே இடத்தில் வெங்கடாஜலபதிக்கு மன்னன் கோவிலையும் எழுப்பினார்.

வராஹ சுவாமி தரிசனம்

திருப்பதியில் வராஹ சுவாமி பெருமாளை தரிசித்த பிறகே ஸ்ரீனிவாசரை தரிசிக்க வேண்டும் .அதேபோல் இங்கேயும் வராகரை தரிசித்த பிறகே பெருமாளை தரிசனம் செய்யவேண்டும் , வராஹ அவதாரத்தை கருட ஆழ்வார் காணமுடியாமல் போகவே அவரின் வேண்டுகோளை ஏற்று இத்தலத்தில் பெருமாள் கருடனுக்கு வராஹ அவதாரத்தை காட்டினார். இங்கு வராஹர் தனது வலது காலை ஆதிசேஷனின் வால் மீதும், இடது காலை ஆதிசேஷனின் தலையின் மீது வைத்து, லட்சுமி தேவியை மடியில் அணைத்தபடி தரிசனம் தருகிறார் .

திருவோண தீபம்

திருவோணம் நட்சத்திரக்காரர்கள் சென்று தரிசிக்க வேண்டிய கோவிலாகும் . ஒவ்வொரு மாதமும் வரும் திருவோணம் நட்சத்திரம் அன்று ஓண தீபம் ஏற்றுகிறார்கள்

,அன்று காலை பெருமாள் யாக மண்டபத்தில் எழுந்தருள்கிறார். அப்போது ஸ்ரீனிவாசருக்கு யாகம் ,திருமஞ்சனம் மற்றும் திருக்கல்யாணம் நடக்கும் .அப்போது பெருமாள் சன்னதியில் அகன்ற தீபத்தில் நெய் ஊற்றி பெருமாளின் காலடியில் வைத்து ஆராதனை செய்கிறார்கள் . திருவோண நட்சத்திரக்காரர்கள் மற்றும் பக்தர்கள் திருமணம் தோஷம் மற்றும் புத்திர தோஷம் உடையவர்கள் நெய் கொடுத்து தீப தரிசனம் காணுகிறார்கள் .

Read More