திருப்பாச்சேத்தி திருநோக்கிய அழகியநாதர் கோவில்

திருப்பாச்சேத்தி திருநோக்கிய அழகியநாதர் கோவில்

இருதய நோய், வயிற்று நோய், வாத நோய் முதலிய நோய்களை நீக்கும் பைரவர்

மதுரையில் இருந்து ராமேசுவரம் செல்லும் சாலையில் 34 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருப்பாச்சேத்தி. இறைவன் திருநாமம் திருநோக்கிய அழகியநாதர். இறைவியின் திருநாமம் மருநோக்கும் பூங்குழலி. 1300 ஆண்டுகள் பழமையான தலம் இது.

பொதுவாக சிவன் கோவில்களில் பைரவர், ஒரு நாய் வாகனத்துடன் தான் காட்சிய அளிப்பார். ஆனால் இக்கோவிலில், பைரவர் இரண்டு நாய் வாகனங்களுடன் அருள்பாலிக்கிறார். இப்படி இரட்டை நாய் வாகனங்களுடன் பைரவர் எழுந்தருளி இருப்பது ஒரு அரிய காட்சியாகும். இவருக்கு கஷ்ட நிவாரண பைரவர் என்று பெயர். சரும நோய், வயிற்று நோய், வாத நோய், பித்த நோய், இருதய நோய் முதலிய நோய்களை நீக்குபவராக உள்ளதால், இவருக்கு இந்த பெயர் ஏற்பட்டது.

இசைக் கல் நடராஜர்

இக்கோவிலில் எழுந்தருளி இருக்கும் நடராஜர், இசைக் கல் நடராஜர் என்று அழைக்கப்படுகிறார். இவரது திருமேனியை தட்டினால், இசை ஒலி எழும்பும் என்பது ஒரு தனிச்சிறப்பாகும்.

Read More
திருநோக்கிய அழகியநாதர் கோவில்

திருநோக்கிய அழகியநாதர் கோவில்

சிவபெருமானுக்கு துளசி தளத்தால் அர்ச்சனை செய்யப்படும் தலம்

மதுரை ராமேஸ்வரம் சாலையில் சுமார் 34 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தலம் திருப்பாச்சேத்தி. இறைவன் திருநாமம் திருநோக்கிய அழகியநாதர். இறைவி மருநோக்கும் பூங்குழலியம்மை.

திங்கட்கிழமைகளில் ஈசனுக்கு துளசித்தள அர்ச்சனை

பொதுவாக சிவாலயங்களில் சிவபெருமானுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்வார்கள். பார்வதி தேவி, தனது குறைகளை போக்க வேண்டி இத்தலத்தில், திங்கட்கிழமையில் துளசி தளங்களால் சிவபெருமானை வழிபட்டாளாம். அதனால் திங்கட்கிழமைகளில் இத்தல ஈசனுக்கு துளசித்தள அர்ச்சனை நடைபெறுகிறது.

மகாலட்சுமி வழிபட்ட தலம்

திருமணமானபின், கருத்து வேறுபாட்டால் பிரிந்த கணவன் மனைவியர், அழகிய நாதரை வழிபட்டால், பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேர்கிறார்கள். நளமகாராஜன் இத்தல இறைவனை வழிபட்டு பிரிந்த மனைவி, குழந்தையை அடைந்தான். மகாலட்சுமியே வழிபட்ட தலம். ஆதலால் இங்கு வந்து வழிபடுபவர்களுக்கு திருமணம் கைகூடுகிறது. குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களும், சனி தோஷம் நிவர்த்தி, கலி தோஷ நிவர்த்தி, பிரம்மகத்தி தோஷ நிவர்த்தி வேண்டுபவர்களும் இத்தலம் வந்து தரிசனம் செய்ய சிறந்த பலன் கிடைக்கும். பழமையான இத்தலத்திற்கு வந்தால் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இங்குள்ள இரண்டு மரகதலிங்கங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இரண்டு மரகதலிங்கங்களை ஒருசேர தரிசிப்பது மிகவும் அபூர்வம். எட்டு வகையான சனிதோஷங்களும் இவரை வழிபட்டால் விலகும் பிரதோஷ நாட்களில் இவருக்கு சிறப்பு பூஜைஅள் உண்டு அப்போது மட்டும் மரகத லிங்கம் தரிசனம் கிட்டும்.

Read More