கைலாசநாதர் கோவில்

கைலாசநாதர் கோவில்

நந்திமீது அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் தட்சிணாமூர்த்தி

மதுரையில் இருந்து 33 கி.மீ. தூரத்திலும் உசிலம்பட்டியில் இருந்து 15 கி.மீ. தூரத்திலும் உள்ள தலம் திடியன்மலை. இறைவன் திருநாமம் கைலாசநாதர் . இறைவி பெரிய நாயகி.

இத்தலம்1000 வருடத்திற்கு மேல் பழைமையானது. இந்தக் கோவில் 'தென்திருவண்ணாமலை' என்று அழைக்கப்படுகிறது. திருவண்ணாமலை போய் கிரிவலம் வர முடியாதவர்கள், இங்கு கிரிவலம் வந்தால் திருவண்ணாமலையில் செய்த புண்ணியம் கிடைக்குமாம்.

காயத்ரி மந்திரத்துக்கு மூல வடிவம் கொடுத்த ஞானகுரு தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கும் தலங்களில் முக்கியமான தலமாக இத்தலம் திகழ்கிறது.

பொதுவாக தட்சிணாமூர்த்தி, சனகாதி முனிவர்களுடன் காட்சி கொடுப்பார். ஆனால், இந்தத் தலத்தில் 14 சித்தர்களுடன் நந்திவாகனத்தில் வீராசனத்துடன் (யோகம்) தரிசனம் தருவது மிகவும் விஷேசம். மற்றொரு இவருடைய விக்கிரகம் சிறப்பு காசியிலிருந்து கொண்டு வரப்பட்டது.

தட்சிணாமூர்த்தி லோக குருவாக அமர்ந்து சித்தர்களுக்கு உபதேசிக்கும் தலமாதலால் இது குருபரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. இங்குள்ள தட்சிணாமூர்த்திக்கு 14 வாரங்கள் விளக்கு ஏற்றி வழிபட தோஷங்கள் விலகித் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நினைத்த காரியங்கள் நிறைவேறவும், செல்வம் சேரவும் , நேரம் சரியில்லை என்று புலம்புபவர்களும் , எதிர்காலம் குறித்து அச்சம் கொண்டவர்களும் ,கிரஹ தோஷங்கள் உள்ளவர்களும் வணங்க வேண்டிய தெய்வம் திடியன்மலை தக்ஷிணாமூர்த்தி.

Comments (0)Newest First

Read More