சேங்கனூர்  சீனிவாச பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

சேங்கனூர் சீனிவாச பெருமாள் கோவில்

திருப்பதி பெருமாள் நேரில் வந்து சேவை சாதித்த தலம்

கும்பகோணத்திலிருந்து சென்னை செல்லும் சாலையில், திருப்பனந்தாள் அருகில், சுமார் 16 கி. மீ. தொலைவில் அமைந்துள்ள தலம் சேங்கனூர். இத்தலத்தில், சுவாமி பெரியவாச்சான் பிள்ளை வீதியில் அமைந்திருக்கிறது சீனிவாச பெருமாள் கோவில். சேங்கனூர், திருவெள்ளியங்குடி என்னும் திவ்ய தேசத்திற்கு வெகு அருகாமையில் உள்ளது. வைணவ உரைநடை ஆசிரியர்களில் முதன்மையானவரும் , 'வியாக்கியான சக்ரவர்த்தி ' எனப் போற்றப்படுபவருமான ஸ்ரீபெரியவாச்சான் பிள்ளை, இத்தலத்தில்தான் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு அவதரித்தார். ஆழ்வார்கள் இயற்றிய நாலாயிர திவ்யபிரபந்தம், ராமாயணம் போன்ற பல நூல்களுக்கு, அவர் எழுதிய விளக்க உரை வைணவ ஆச்சாரியார்களால் பெரிதும் போற்றிக் கூறப்படுகின்றது.

ஒரு சமயம், சேங்கனுரில் வாழ்ந்த ஸ்ரீபெரிய வாச்சான் பிள்ளை தன் மனைவியுடன் திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்ய சென்றார். பெருமாளின் மேல் ஆழ்ந்த பக்தி கொண்டு திருப்பதியில் தங்கி விட நினைக்க, எம்பெருமான் திரு உள்ளம் வேறெண்ணியது. தன்னுடைய சாளக்கிராம உருவத்தை அர்ச்சகர் மூலம் ஸ்ரீபெரியவாச்சான் பிள்ளையிடம் சேர்த்து, அவரால் இன்னும் பல தெய்வீக காரியங்கள் நடக்க வேண்டும் என கூறி செங்கனுர் செல்ல கூறினார். வழியில் சாளக்கிராமத்தை, கொள்ளிடம் நதிக்கரையில் வைத்து விட்டு இருவரும் நீராடி விட்டு திரும்பும்போது அந்த சாளக்கிராமம் காணவில்லை. அதனால், அன்ன ஆகாரமில்லாமல் இருந்து தன் உயிரை விட்டுவிட முடிவு செய்தார். அவர் கனவில் சங்கு சக்ரதாரியாக தோன்றிய ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கூறியபடி, அவர் கிராம மக்களுடன் சாளக்கிராமம்

வைத்த இடத்தில் தேட, ஸ்ரீ வெங்கடேச பெருமாள் முழு உருவத்துடன் கிடைத்தார். அந்த சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட கோவில்தான் சீனிவாச பெருமாள் கோவில். ஸ்ரீ சீனிவாச பெருமாளின் பாதத்தில் ஒரு சாளக்கிராம கல் இருக்கின்றது. பெரியவாச்சான் பிள்ளை தன் வாழ்நாள் முடிந்ததும், அந்த சாளக்கிராம கல்லில் ஐக்கியமாகி, பெருமாள் திருவடியில் சேர்ந்துவிட்டார் என்பது வரலாறு.

Read More