செட்டிகுளம்  பால தண்டாயுதபாணி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

செட்டிகுளம் பால தண்டாயுதபாணி கோவில்

கையில் கரும்புடன் காட்சி தரும் முருகப்பெருமானின் அபூர்வ கோலம்

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆலத்தூர் கேட்டிலிருந்து மேற்கே 8 கி.மீ தொலைவிலும் பெரம்பலூருக்கு தெற்கே சுமார் 18 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது செட்டிகுளம். இந்த ஊரில் உள்ள மலையின் மீது அமைந்திருக்கிறது பால தண்டாயுதபாணி கோவில். பொதிகை மலைக்கு செல்லும் வழியில் அகத்தியர் இத்தலத்து முருகனை தரிசிக்க வந்தார். அப்போது அவருக்கு முருகப்பெருமான் வளையல் விற்கும் செட்டியாராக காட்சி தந்தார். அதனால் இத்தலத்திற்கு செட்டியார் குளம் என்ற பெயர் ஏற்பட்டது. இத்தலத்திற்கு வடபழநிமலை என்ற பெயரும் உண்டு.

பொதுவாக தண்டாயுதபாணி சுவாமி கோலத்தில் கையில் தண்டத்துடன் காட்சி தரும் முருகப்பெருமான், இத்தலத்தில், தன் கையில் 11 கணுக்களை உடைய செங்கரும்பினை ஏந்தி காட்சி தருகிறார். இது நாம் வேறு எந்த முருகன் தலத்திலும் காண முடியாத அரிய காட்சியாகும். மேலும் இவர் மொட்டை தலையாக இல்லாமல் உச்சிக்குடுமியுடன் காட்சியளிப்பது மற்றுமொரு சிறப்பாகும்.

தன் ஆணைக்கு இணங்க அசுரர்களை அழித்த முருகப்பெருமானுக்கு, தன் கையில் இருந்த கரும்பை பரிசாக வழங்கி அன்னை காமாட்சியம்மன் ஆசி வழங்கினார். அன்று முதல் இத்தலத்தில் கரும்பு ஏந்திய ஏந்திய கோலத்தில் நமக்கு அருள்பாலித்து வருகிறார். அதனாலேயே இத்தலத்திலுள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், காமாட்சியம்மன் கையில் கரும்பு இல்லாமல் காட்சி தருகிறார்.

மழலைப் பேறு வேண்டி கரும்பு தொட்டில் பிரார்த்தனை

மழலைப் பேறு வேண்டுவோர் சஷ்டியில் விரதம் இருந்து மலைமீதுள்ள தலவிருட்சமான வில்வமரத்தில் தொட்டில்கட்டி வழிபடுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியவுடன் கரும்பு தொட்டிலில் குழந்தையை வைத்து மலையேறி தங்கள் வேண்டுதலை நிறைவு செய்கின்றனர்.

அருணகிரிநாதர் தமது திருப்புகழில் இத்தலத்து முருகனை பற்றி பாடியுள்ளார்.

Read More