சிறுமுகை பழத்தோட்டம் பாலசுப்பிரமணியர் கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

சிறுமுகை பழத்தோட்டம் பாலசுப்பிரமணியர் கோவில்

தலையில் குடுமியுடன் காட்சி அளிக்கும் பாலமுருகன்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவிலும், ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் இருந்து 20 கி.மீ. தொலைவிலும், அமைந்துள்ளது. பவானி நதிக்கரையில் உள்ள இக்கோவில் ஆயிரம் வருடங்கள் பழமையானது. முற்காலத்தில் கோவில் அமைந்திருக்கும் பவானி நதிக்கரையோரம், ஏராளமான மாமரங்கள், பலா மரங்கள், கொய்யா மரங்கள் நிறைந்திருந்தன. அதனால் இக்கோவில் பழத்தோட்டம் பாலசுப்பிரமணியர் கோவில் என்று அழைக்கப்படுகிறது. பழனி திருஆவினன்குடி கோவிலை அடுத்து, இந்த வட்டாரத்தில் தரை பரப்பில் அமைந்த முருகன் கோவில்களில் இது மிகவும் பிரசித்தி பெற்றது.

கருவறையில் பாலமுருகன், இரண்டரை அடி உயர திருமேனியுடன், கையில் வேலேந்தி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இந்த பாலமுருகனின் பின்னந்தலையில் குடுமி அமைந்திருப்பது ஆச்சரியமாகும். இந்த பாலமுருகனின் கோலத்தை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.

பிரார்த்தனை

இந்த பாலமுருகனுக்கு, செவ்வாய்க்கிழமை செவ்வரளி மாலை சாற்றி வழிபட்டால், குடும்பத்தில் சகல கஷ்டங்களும் விலகி, செல்வ செழிப்பு உண்டாகும். இவரை வணங்கினால் திருமண தடைகள் நீங்கும்; சந்தான பாக்கியம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More