கிருபா சமுத்திரப் பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

கிருபா சமுத்திரப் பெருமாள் கோவில்

ஆதிசேஷனுக்கு தனிச்சன்னதி கொண்ட திவ்யதேசம்

பெருமாள் கோவில் களில் பொதுவாக ஆதிசேஷனை நாம் பெருமாளுடன் சேர்ந்த வண்ணம் தான் காண முடியும். அதாவது பெருமாள் ஆதிசேஷனின் மேல் சயன கோலத்தில் காட்சி தருவார்.எனவே எந்த பெருமாள் கோவில்களிலும் நாம் ஆதிசேஷனை தனித்து தரிசிக்க முடியாது.ஆனால் சிறுபுலியூர் என்னும் சோழநாட்டு திவ்ய தேசத்தில் ஆதிகேசவ பெருமாள் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.ஆதிசேஷன் ஆயிரம் தலைகள் உடையவர்.ஆனால் அவர் சிறுபுலியூரில் ஐந்து தலை நாகமாக சங்கு சக்கரம் தரித்து நான்கு திருக்கரங்களுடன் தவக்கோலத்தில் காட்சி தருகிறார்.இது காண்பதற்கு அரிதான காட்சியாகும்,

Read More
கிருபா சமுத்திரப் பெருமாள் கோவில்
Perumal, பெருமாள் Alaya Thuligal Perumal, பெருமாள் Alaya Thuligal

கிருபா சமுத்திரப் பெருமாள் கோவில்

பெருமாளுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்யப்படும் திவ்யதேசம்

சிறுபுலியூர் என்னும் சோழநாட்டு திவ்ய தேசம் மயிலாடுதுறை திருவாரூர் சாலையில் அமைந்துள்ள கொல்லுமாங்குடி என்னும் இடத்தில் இருந்து, கிழக்கே சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.இந்த ஆலயத்தின் தல விருட்சம் வில்வ மரமாகும்.அதனால் இத்தலத்துப் பெருமாளுக்கும் தாயாருக்கும் வில்வத்தால் அர்ச்சனை செய்வது சிறப்பானதாகும்.

Read More