சிறுகரும்பூர்  திரிபுராந்தக ஈஸ்வரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

சிறுகரும்பூர் திரிபுராந்தக ஈஸ்வரர் கோவில்

நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் சுந்தர காமாட்சி அம்மன்

சென்னை-வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஓச்சேரி என்னும் இடத்திலிருந்து 1.5 கி.மீ. தொலைவிலும், காவேரிப்பாக்கத்திலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் உள்ளது சிறுகரும்பூர் திரிபுராந்தக ஈஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் சுந்தரகாமாட்சி.

அம்பிகை சுந்தரகாமாட்சி பெயருக்கேற்றார்போல், அழகே உருவாய், அருளே வடிவாய் இங்கு ஆட்சிபுரிந்து வருகிறாள். பொதுவாக காமாட்சி அம்மனை நாம் அமர்ந்த கோலத்தில்தான் தரிசித்து இருப்போம். ஆனால் இத்தலத்தில், மங்கலங்களை அருளும் தேவியாய், மனதைக் கவரும் தெய்வீகத் தோற்றத்துடன் சாந்தம் தவழும் விழிகளால், மலர், பாசம் ஏந்தி அபய-வரத முத்திரை அருளி, குண்டலங்கள், ஹார வடங்கள், அணிந்தும் தாமரை மலரில் நின்ற திருக்கோலத்தில் ஒயிலுடன் காட்சி தருகிறாள். இப்படி நின்ற கோலத்தில் காமாட்சி அம்மன் அருள் புரிவது தனிச்சிறப்பாகும். அம்பாளின் எதிரில் ஸ்ரீசக்கரம் உள்ளது.

அம்பிகை சுந்தரகாமாட்சி மரகதப் பச்சைக்கல்லால் ஆனவள் என்கின்றனர். அம்பிகையின் கருவறை சுவர்களும் பச்சைக் கல்லால் ஆனது. பச்சை நிறம் குளிர்ச்சியை தரவல்லது. அதுபோல் பச்சைத் திருமேனி உடைய இந்த அம்மனும் தன்னுடைய பக்தர்களுக்கு வேண்டிய வரம் அளித்து அவர்களது மனதை குளிர்விக்கிறாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பிரார்த்தனை

இத்தலத்தில் வில்வ மரமும், வேப்ப மரமும் பின்னிப் பிணைந்து காணப்படுகின்றது. குழந்தைப்பேறு வேண்டுவோர், தம்பதியராக வந்து இந்த மரங்களுக்கு பூஜை செய்தால் மழலைச் செல்வம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
சிறுகரும்பூர்  திரிபுராந்தக ஈஸ்வரர் கோவில்

சிறுகரும்பூர் திரிபுராந்தக ஈஸ்வரர் கோவில்

63 நாயன்மார்களை லிங்க வடிவில் சடையில் தரித்த தட்சிணாமூர்த்தி

சென்னை-வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஓச்சேரி என்னும் இடத்திலிருந்து 1.5 கி.மீ. தூரத்தில் உள்ளது சிறுகரும்பூர் திரிபுராந்தக ஈஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் சுந்தரகாமாட்சி. இக்கோவில் 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அன்னியர்கள் படையெடுப்பின்போது இக்கோவிலை காப்பாற்ற எண்ணிய பக்தர்கள், இதனை மண்ணால் மூடிவிட்டனராம். பின்பு, 1958-ல், அப்போதைய வேலூர் மாவட்ட ஆட்சியாளர் பாஸ்கர தொண்டைமான் ( ‘வேங்கடம் முதல் குமரி வரை’ போன்ற பிரசித்தி பெற்ற ஆன்மீக நூல்களை எழுதியவர்) என்பவரால் ஆலயம் வெளிக் கொணரப்பட்டது.

இறைவனின் கருவறையின் வெளிச் சுற்றுச் சுவரில் பச்சைக் கல்லாலான தட்சிணாமூர்த்தி எழுந்தருளி உள்ளார். இவர் தனது தலையின் சடையில் 63 நாயன்மார்களை சிவலிங்க வடிவில் தரித்துள்ளார். அவருடைய காதுகளில் மகரம் என்னும் அணிகலன்,முதலையின் தலை வடிவில் குண்டலமாக தொங்குகின்றது.

அவர் அமர்ந்திருக்கும் ஆசனத்தில் 27 நட்சத்திரங்கள் வட்ட வடிவ உருவில் அமைந்திருக்கின்றன. இந்த தட்சிணாமூர்த்தியின் தலையின் மேல் கல்லாலமரம் இருக்கின்றது.

தாயின் வயிற்றில் குழந்தையின் நிலையை காட்டும் ஆச்சரியமான சிற்பம்

இக்கோவிலில் அமைந்துள்ள சிற்பங்களின் கலைத்திறனும், நுணுக்க வேலைப்பாடுகளும் நம்மை பிரம்மிக்க வைக்கின்றன. ஒரு தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் நிலையை காட்டும் சிற்பமானது மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கின்றது. இந்த சிற்பம், நம் முன்னோர்களின் சிற்பத் திறனை மட்டுமல்லாது, விஞ்ஞான அறிவினையும் உலகத்திற்கு பறைசாற்றுகின்றது.

Read More