சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோவில்

சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோவில்

கையில் பாம்பை பிடித்தபடி இருக்கும் சர்ப்ப பைரவர்

தென்காசியில் இருந்து சுமார் 45 கி மீ தொலைவில் உள்ளது சங்கரன்கோவில். இறைவனின் திருநாமம் சங்கரலிங்கசுவாமி. இறைவியின் திருநாமம் கோமதி அம்மன்.

பைரவர் சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவராவார். சிவபெருமானின் சொரூபங்களில் சரபேசரும், பைரவரும் பக்தர்களின் கோரிக்கைகளை கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவர். பைரவர், சிவன் கோவிலின் வட கிழக்குப் பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தருபவர்; ஆடைகள் எதுவுமில்லாமல் பன்னிரு கைகளுடன் நாகத்தை பூணூலாகவும், சந்திரனைத் தலையில் வைத்தும், சூலாயுதம், பாசக் கயிறு, அங்குசம் ஆகிய ஆயுதங்களைத் தாங்கியும் நிர்வாண ரூபமாய்க் காட்சி தருபவர். இவர் காவல் தெய்வம் என்பதால் பைரவரின் வாகனமாக நாய் குறிப்பிடப்படுகிறது.

ஆனால் பைரவர், சங்கரன்கோவில் ஸ்ரீசங்கர நாராயணர் கோவிலில், நின்ற திருக்கோலத்தில் தனது இடது மேற்கரத்தில், செங்குத்தாக பாம்பை கையில் ஏந்தியபடி காட்சி தருகிறார். இவரை 'சர்ப்ப பைரவர்' என்கிறார்கள். ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியிலும் இந்த பைரவரை வணங்கினால், அரளி மலர்கள் சார்த்தி, மிளகு வடை மாலையோ வெண் பொங்கலோ நைவேத்தியம் படைத்து வணங்கி வழிபட்டால், எல்லா செளபாக்கியங்களும் தடையின்றித் தந்தருள்வார். சர்ப்ப தோஷம் முதலான சகல தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம்.

சதய நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சர்ப்ப பைரவர்

27 நட்சத்திரக்காரர்களும், அவரவர்க்குரிய பைரவரை வழிபட்டால் நற்பலன்கள் கூடும். அந்த வகையில், சதயம் நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய பைரவர், சர்ப்ப பைரவர் ஆவார்.

Read More
சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோவில்

தெற்குவாசி துர்க்கை

தென்காசியில் இருந்து சுமார் 45 கி மீ தொலைவில் உள்ளது சங்கரன்கோவில். இறைவனின் திருநாமம் சங்கரலிங்கசுவாமி.இறைவியின் திருநாமம் கோமதி அம்மன். பாண்டிய நாட்டின் பஞ்சபூத தலங்களில் சங்கரன்கோவில், பிரித்திவி(மண்) தலமாக விளங்குகின்றது.

பொதுவாக சிவத்தலங்களில் சுவாமியின் கருவறை சுற்றுச்சுவரில், வடக்கு நோக்கி துர்க்கை எழுந்தருளி இருப்பாள். ஆனால் இக்கோவிலில் தெற்கு முகமாக எழுந்தருளி இருக்கும் துர்க்கையைக் காணலாம். அதனால் இந்த துர்க்கையை 'தெற்குவாசி துர்க்கை' என்று அழைக்கின்றனர். தெற்கு என்பது எமதர்மனின் திசையாகும். எனவே, தெற்கு பார்த்தபடி வீற்றிருக்கிற துர்க்கையை, ராகுகாலவேளையில் வணங்கினால், கணவனின் ஆயுள் நீடிக்கும். தாலி பாக்கியம் நிலைக்கும் என்பது நம்பிக்கை. குறிப்பாக, வெள்ளிக்கிழமை ராகுகால வேளையில், எலுமிச்சை தீபமேற்றி வழிபடுவது சிறப்பு.

நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் இருக்கும் இந்த துர்க்கைக்கு, நவராத்திரி நாட்களில் செய்யப்படும் சிறப்பு அலங்காரங்கள், பார்ப்பவரை பரவசமடையச் செய்யும்.

Read More
சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோவில்
விநாயகர், Vinayagar Alaya Thuligal விநாயகர், Vinayagar Alaya Thuligal

சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோவில்

கையில் பாம்பை ஏந்தியவாறு காட்சி தரும் சர்ப்ப விநாயகர்

தென்காசியில் இருந்து சுமார் 45 கி மீ தொலைவில் உள்ளது சங்கரன்கோவில். இறைவன் சங்கரலிங்கசுவாமி. இறைவி கோமதி அம்மன்.

இக்கோவிலின் சங்கரலிங்கசுவாமி சன்னதியின் கன்னி மூலையில் சர்ப்ப விநாயகர் வீற்றிருக்கிறார். இவர் 6 அடி உயர திருமேனியுடன் சர்ப்பத்தின் மேல் அமர்ந்து காட்சியளிக்கிறார். தனது இடது கையால் சர்ப்பத்தின் தலையை பிடித்தவாறு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இவரை வழிபாடு செய்பவர்கள் சர்ப்ப தோஷத்திலிருந்து விடுபட்டு, திருமணத்தடை நீங்கி வாழ்க்கையில் மேன்மை அடைகின்றனர் என்பது இக்கோவிலின் ஐதீகம். இந்த சர்ப்ப விநாயகரை நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் ராகு, கேது போன்ற சர்ப்ப கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும். இராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இவருக்கு ஞாயிற்றுக்கிழமை இராகு காலத்தில், பாலபிஷேகம் செய்து, பால் பாயசம் படைத்து வேண்டிக் கொள்கிறார்கள். குழந்தைகள், விஷப்பூச்சிகளால் பாதிக்கப்படாமல் இருக்க, இவருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வேண்டிக் கொள்கின்றனர். இவரை வழிபட்டால் புத்திர தோஷம் நீங்கி மழலைச் செல்வம் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More