கொழுமம் மாரியம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

கொழுமம் மாரியம்மன் கோவில்

சிவலிங்க வடிவில் காட்சி தரும் மாரியம்மன்

பழனியில் இருந்து 20 கி.மீ துாரத்திலுள்ள கொழுமம் என்ற ஊரில் உள்ளது மாரியம்மன் கோவில். வணிகர்கள் குழுமியிருந்து வியாபாரம் செய்ததால் குழுமூர் என்று அழைக்கப்பட்டு வந்த இந்த இந்த ஊர், காலப்போக்கில் மருவி கொழுமம் என்று பெயர் பெற்றது.

அமராவதி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இக்கோவிலில், மாரியம்மன் கிழக்கு நோக்கி, சுயம்புத் திருமேனியுடன் வீற்றிருக்கிறாள். இந்த ஆலயத்தில் உள்ள மாரியம்மன், தரைக்கு மேல் இரண்டரை அடி உயரத்தில் லிங்க வடிவில் இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். லிங்கத்தின் கீழ் ஆவுடையாரும் உள்ளது. இந்த மூலவரைப் பார்க்கும்போது, அம்மனுக்குரிய எந்தவித அம்சமும் தெரியாது. இருப்பினும் கூட இந்த லிங்கத்தை, அம்மனாக பாவித்து, புடவை அணிவித்து பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர். இந்த மாரியம்மன் உயரமான இடத்தில் கோட்டை போல இருந்து, இந்த ஊரை காப்பாற்றுவதால் கோட்டை மாரி என்றும் அழைக்கப்படுகிறாள்.

இக்கோவிலில் தரப்படும் தீர்த்தம், அம்மை நோய், கண் நோய் முதலிய நோய்களை தீர்க்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More