ஸ்ரீசைலம் மல்லிகார்ச்சுனேசுவரர் கோவில்

ஸ்ரீசைலம் மல்லிகார்ச்சுனேசுவரர் கோவில்

நந்தி தேவர் அவதரித்த தலம்

ஆந்திர மாநிலத்தின் கர்நூல் மாவட்டத்தில் அமைந்துள்ள நல்லமலைக் குன்றில் அமைந்துள்ளது, ஸ்ரீசைலம் மல்லிகார்ச்சுனேசுவரர் கோயில். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் வட நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இறைவன் திருநாமம் ஸ்ரீசைலநாதர். இறைவியின் திருநாமம் பிரமராம்பாள். ஸ்ரீசைலம், சிவனின் 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்று. அம்மனின் 51 சக்திபீடங்களில் இது மூன்றாம் இடத்தில் இருக்கிறது. குருக்ஷேத்ரத்தில் லட்சக்கணக்காக தானம் செய்வதாலும், கங்கையில் 2000 முறை குளிப்பதாலும், நர்மதா நதிக்கரையில் பல வருடங்கள் தவம் செய்வதாலும், காசியில் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ அவ்வளவு புண்ணியம் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனரை ஒரு முறை தரிசிப்பதால் கிடைக்கிறது என கந்த புராணம் கூறுகிறது. நந்தியே இங்கு மலையாக அமைந்திருந்து அதன் மீது சிவபெருமான் ஆட்சிபுரிகிறார்.

சிலாதர் என்ற மகரிஷி குழந்தை வரம் வேண்டி சிவனைக் குறித்து தவம் இருந்தார். சிவனின் அருளால் நந்தி, பர்வதன் என்ற இரு ஆண் குழந்தைகள் பிறந்தனர். குழந்தைகளைப் பார்க்க சனகாதி முனிவர்கள் வந்தனர். அவர்கள், நந்திதேவர் சில காலம் தான் பூமியில் வாழ்வார் என சிலாதரிடம் தெரிவித்தனர். சிலாதர் மிகவும் வருந்தினார். தந்தையின் வருத்தத்தை அறிந்த நந்தி,"தந்தையே! கலங்காதீர்கள். நான் சிவனைக்குறித்து கடும் தவம் இருந்து சாகா வரம் பெறுவேன்," என்றார். தவத்தில் மகிழ்ந்த சிவன், நந்தியை தன் வாகனமாக்கியதுடன், அவரது அனுமதியின்றி யாரும் தன்னை காண வர முடியாது என்று உத்தரவும் பிறப்பித்தார். நந்தி தவம் செய்த 'நந்தியால்' என்ற இடம் மலையின் கீழே உள்ளது. அத்துடன் அவனது தம்பியாகிய பர்வதனும் தவமிருந்து பர்வத மலையாக மாறும் வரம் பெற்றான். சிவபெருமான் நந்தியை தன் வாகனமாக்கியதும் இத்தலத்தில் தான். மேலும், அவரது அனுமதியின்றி யாரும் தன்னை காண முடியாது என்ற உத்தரவையும் பிறப்பித்தார்.

முக்கிய சிவத்தலங்களில், இமயமலையிலுள்ள கைலாயம் முதலிடமும், நந்தி அவதரித்த ஸ்ரீசைலம் இரண்டாம் இடமும் வகிக்கிறது. பிரதோஷத்தன்று நமது ஊர் நந்தீஸ்வரரை வணங்கி வந்தாலே கோடி புண்ணியம் கிடைக்கும் போது, நந்திதேவர் அவதரித்த தலத்திற்கே சென்று அவரை வணங்கி வந்தால், முக்தியே அடைந்து விடலாம் என்பது ஐதீகம்.பிரதோஷத்தன்று நமது ஊர் நந்தீஸ்வரரை வணங்கி வந்தாலே கோடி புண்ணியம் கிடைக்கும் போது, நந்திதேவர் அவதரித்த தலத்திற்கே சென்று அவரை வணங்கி வந்தால், முக்தியே அடைந்து விடலாம் என்பது ஐதீகம்.

Read More
விஜயவாடா கனக துர்கா கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

விஜயவாடா கனக துர்கா கோவில்

விஜயவாடா கனக துர்க்கையம்மன்

ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா மாவட்டத் தலைமையிடமான விஜயவாடா நகரத்தில் கிருஷ்ணா ஆற்றின் கரையில் உள்ள இந்திரநீலாத்திரி மலையில் அமைந்துள்ளது கனக துர்கா கோவில். விஜயவாடா நகர காவல் தெய்வமான கனக துர்க்கா எனப்படும் துர்க்கையம்மன் இந்த கோயிலில் வீற்றுள்ளார். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று. ஆதிசங்கரர் இத்தலத்திற்கு விஜயம் செய்து அம்பாள் சன்னதியில் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்திருப்பது சிறப்பு.

கீலா என்ற அசுரன் துர்க்கையின் அருள் வேண்டி தவம் செய்தான். தவத்தில் மகிழ்ந்த துர்க்கை காட்சி கொடுக்க, 'அன்னையே! நீ எப்போதும் என் இதயத்திலேயே வாசம் செய்ய வேண்டும்' என வரம் கேட்டான். கீலாவின் வேண்டுகோளை ஏற்ற துர்க்கை, மகனே! நீ கிருஷ்ணா நதிப்படுகையில் மலையாக உயர்ந்து நில்' அரக்கர்களை அழித்த பின் நான் உன் இதயத்தில் இருப்பேன், என வரமளித்தாள். துர்க்கையின் ஆணைப்படி, கீலா மலையாக மாறினான். அன்னை துர்கா, மகிஷாசுரன் என்ற அரக்கனை வதம் செய்தபின், கீலா மலை மீது அஷ்டகரங்களுடன் மகிஷாகரமர்த்தினி என்ற திருநாமத்துடன் வாசம் செய்தாள். மகிஷாசுரனை அழித்த சந்தோஷத்தில் இத்தலத்தில் தங்க மழை பொழிய செய்ததால் கனக துர்கா என்ற பெயர் பெற்றாள்.

அம்பாள் மூலஸ்தானத்தின் மேல் தங்ககூரை போடப்பட்டுள்ளது என்பது சிறப்பாகும். கருவறையில் அமைதியான புன்னகை மற்றும் இன்முகத்துடன் அம்மன் காட்சி தருகிறார். கனக துர்காதேவியின் எட்டு கைகளில் எட்டு ஆயதங்கள் உள்ளன.

நவராத்திரி விழா

இத்தலத்தில் நவராத்திரி மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கனக துர்காதேவியின் எட்டு கைகளில் எட்டு ஆயதங்கள் உள்ளன. இத்தலத்தில் நவராத்திரி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. உலகிலேயே இத்தலத்தில்தான் மூலவரான அம்மன் சரஸ்வதி, மகாலட்சுமி, பால திரிபுரசுந்தரி, ராஜராஜேஸ்வரி, மகிஷாசூரமர்த்தினி, துர்கா தேவி, அன்னப்பூர்ணாதேவி, காயத்ரி, லலிதா திரிபுரசுந்தரி ஆகிய அலங்காரங்களில் நலராத்திரியின்போது காட்சி தருகிறார். விஜயதசமி அன்று அம்மனை, கிருஷ்ணா நதியில் அன்ன வடிவத்தில் அமைக்கப்பட்ட தெப்பத்தில் பவனி வரச் செய்வார்கள். இந்த விழாவிற்கு நவுக விஹாரம் என்று பெயர்.

சீனப்பயணி யுவான் சுவாங்கின் பயணக் குறிப்பு

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்த சீனப்பயணி யுவான் சுவாங், தனது பயணக் குறிப்புகளில் விஜயவாடா கனகதுர்க்கையம்மன் கோயில் குறித்து பதிவு செய்துள்ளார் கோயில் அருகே வரவாற்றை விளக்கும் பல்வேறு கல்வெட்டுகள் இருந்ததாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

சபரிமலை ஐயப்பனுக்கு மாலையணிந்து விரதம் இருந்து செல்வதுபோல, இந்த ஆலயத்தில் அருள் பாலிக்கும் கனகதுர்கா அன்னைக்கும், மாலை அணிந்து, விரதம் இருந்து யாத்திரையாகச் செல்கிறார்கள். எதிரிகளின் தொந்தரவு விலக, செல்வம் செழிக்க இந்த அம்பிகையை வழிபாடு செய்கிறார்கள். அன்னை கனக துர்காவை வணங்கினால், அவளது அருளால் பொன்மழையே பொழியும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஆலயத்துளிகள் இணைய தளத்தில், சென்ற ஆண்டு நவராத்தரி எட்டாம் நாளன்று வெளியான பதிவு

பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன்

https://www.alayathuligal.com/blog/5xn2r77m9f4g5kh9bmnmsgym8thmj8

Read More