இராமனாதீஸ்வரர் கோயில்

அம்பாள் கையில் குழந்தையாக காட்சி தரும் நந்தி தேவர்

நன்னிலத்தில் இருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேவாரத்தலம் இராமநந்தீஸ்வரம்.இத்தலத்து இறைவன் திருநாமம் இராமனாதீஸ்வரர்.இராமபிரான் இத்தலத்திற்கு வந்தபோது, சிவபெருமான் சுயம்புவாக தோன்றினார். இராமபிரானை சாதாரண மனிதர் என்று நந்தி தேவர் அவரைத் தடுத்தார். அம்பாள் தோன்றி உண்மையை உணர்த்த, நந்தி இராமபிரானை வணங்கி, இருவரும் வழிபாடு செய்தனர். அதனால் இத்தலம் 'இராமநந்தீஸ்வரம்' என்று பெயர் பெற்றது. காலப்போக்கில் 'இராமனதீஸ்வரம்' என்று மருவியது.நந்தியை அம்பாள் அணைத்ததால் சோமாஸ்கந்த மூர்த்தத்தில், அம்பாள் கையில் நந்தி குழந்தையாக காட்சி தருகிறார்.

 
Previous
Previous

பழமலைநாதர் கோவில்

Next
Next

எழுத்தறிநாதர் கோவில்