கூடலழகர் கோவில்

பாண்டிய மன்னன் கொடியில் மீன் சின்னம் அமைந்த கதை

பாண்டிய மன்னர்களின் கொடியில் மீன் சின்னம் அமைந்ததற்கு மதுரை கூடலழகர் பெருமாளே காரணமாவார். முற்காலத்தில் கூடலழகர் கோயிலைச் சுற்றி இருபுறத்திலும் மாலையிட்டதுபோல, வைகை நதி, கிருதுமால் நதி ஆகியவை ஓடின. இதில் கிருதுமால் நதி சுருங்கி ஓடையாகி விட்டது. பாண்டிய மன்னனான சத்தியவிரதன், இத்தல பெருமாள் மீது அதீத பக்தி செலுத்தினான். ஒரு முறை அவன் கிருதுமால் நதியில் நீராடிய போது, பெருமாள் மீன் வடிவில் தோன்றி உபதேசம் செய்தார். தனக்கு அருளிய சுவாமியின் நினைவாக மீன் சின்னத்தை பாண்டிய மன்னன் வைத்துக்கொண்டான்.

 
Previous
Previous

ஆரண்யேசுரர் கோயில்

Next
Next

வில்வவனேசுவரர் கோவில்