கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில்

வெட்டுடையார் காளியம்மனிடம் பக்தர்கள் செய்யும் வினோதமான முறையீடு

சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடியில் உள்ள வெட்டுடையார் காளியம்மன் தன் வலது காலை குத்துக்காலிட்டு இடது காலை தொங்கவிட்டு வலது கையில் சூலம் ஏந்திய கோலத்தில் அருள்பாலிக்கிறாள. இங்கு பக்தர்கள் மேற்கொள்ளும் பிரார்த்தனை சற்று வினோதமானது. செய்யாத தவறுக்கு பரிகாரம் தேடுவோர், தம் மீது வீண் பழி சுமத்தப்பட்டோர் ஆகியோர் இந்த அம்பாளிடம் வந்து வேண்டிக்கொள்கின்றனர் இங்கு வந்து, நான் எந்த தவறும் செய்யவில்லை என் மீது வீண் பழி சுமத்தியவர்களை பார்த்துக்கொள் என்று காசு வெட்டிப் போட்டு வேண்டிக்கொள்கின்றனர். தவறு செய்தவர்களை வெட்டுடையார் காளியம்மன் தக்கபடி தண்டிப்பாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இப்படி வெட்டிப் போடப்பட்ட காசுகள், சன்னதிக்குப் பின்புறம் உள்ள பீடத்தில் ஏராளமாக இருக்கின்றன. ஏவல், பில்லி சூனியங்களையும், கண் திருஷ்டிகளையும் நீக்குபவளாக இங்குள்ள வெட்டுடையார் காளியம்மன் இருக்கின்றாள்..

கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில்.jpg
Previous
Previous

கடம்பவனேசுவரர் கோயில்

Next
Next

வேணுகோபாலசுவாமி கோயில்