தேன்கனிக் கோட்டை பேட்டராய சுவாமி கோவில்

வேட்டையனாக வந்த பேட்டராய சுவாமி பெருமாள்

ஒசூர் அருகே தேன்கனிக் கோட்டையில் அமைந்துள்ளது பேட்டராய சுவாமி கோவில். தாயார் திருநாமம் சவுந்தர்யவள்ளி. 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது

இக்கோவில். கருவறையில் பேட்டராய சுவாமியின் உருவம், திருமலை வெங்கடேஸ்வரர் கோவிலில் வெங்கடேஸ்வரரின் உருவத்தைப் போலவே நிற்கும் தோரணையில் உள்ளது.

அத்ரி மகரிஷி மற்றும் கன்வ மகரிஷி ஆகியோர் யாகம் நடத்தும் போது அதை கலைக்கும் எண்ணத்தோடு புலித்தோற்றத்தில் வருகிறார் யட்சன். இதைப் பார்த்த மகரிஷிகள் புலியை விரட்ட பெருமாளை அழைக்கின்றனர். அப்போது திருப்பதியில் இருந்து வேட்டையன் வடிவத்தில் வருகிறார் பெருமாள். புலியாக நின்ற யட்சனின் தலையில் பெருமாள் தான் வைத்திருந்த கதாயுதத்தை கொண்டு அடிக்க யட்சன் புலி தோற்றத்தை விடுத்து பழைய நிலையை அடைகிறார். கதாயுதத்திற்கு டெங்கினி என்ற நாமும் உண்டு. அதனால் இத்தலத்திற்கு டெங்கினிப்புரம் என்ற பெயர் ஏற்பட்டது. அது பின்னர் தேன்கனிக்கோட்டை என்று மாறியது.

வைணவ சம்பிரதாயத்தில் இடம்பெற்றிருக்கும் நான்கு முக்கிய தலங்களான திருப்பதி, ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம், மேலக்கோட்டை ஆகிய தலங்களில் உள்ளவழிபாட்டு முறைகள் இத்தலத்தில் ஒருங்கே கடைபிடிக்கப்படுகின்றன

தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா என 3 மாநிலங்களுக்கும் அருகாமையான பகுதி என்பதால் இங்கு ஏராளமான மக்கள் வருகிறார்கள். வேட்டையனாக வந்த பேட்டராய பெருமாளை வணங்கினால், நம் பாவங்கள் விலகி நன்மை கிடைக்கும் என்பது ஐதீகம்.

 
Previous
Previous

திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோவில்

Next
Next

திருமால்பூர் மணிகண்டீசுவரர் கோவில்