ஊட்டத்தூர் சுத்தரத்தினேசுவரர் கோவில்

மேற்கூரையில் நவக்கிரகங்கள் அமைந்திருக்கும் அபூர்வ அமைப்பு

திருச்சியில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பாடாலூரில் இருந்து புள்ளம்பாடி வழித்தடத்தில் உள்ளது ஊட்டத்தூர். இறைவன் திருநாமம் ஆரண்ய சுத்தரத்தினேசுவரர். இறைவியின் திருநாமம் அகிலாண்டேசுவரி.

பொதுவாக சிவன் கோவில்களில் நவக்கிரகங்கள் மற்றும் ராசிகளின் அதிபதிகள் ஒரு பீடத்தின் மீதோ அல்லது தனி சன்னதியிலோ எழுந்தருளி இருப்பார்கள். ஆனால், ஊட்டத்தூர் சுத்தரத்தினேசுவரர் கோவிலில் கொடி மரம் அருகே மேற்கூரையில் 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள் செதுக்கப்பட்டு அவை பூமியை நோக்கி பார்க்கும்படி உள்ளது. அதன் அருகிலேயே ஒன்பது கிரகங்களும் வடிவமைக்கப்பட்டு உள்ளன. இவை அனைத்தும் பூமியை நோக்கி இருப்பதால் அதன் அடியில் வைத்து செய்யப்படும் யாக பூஜைகள் அனைத்திற்கும் உடனடி பலன் கிடைக்கும். எந்த ராசியை சேர்ந்தவர்களும் இதன் மூலம் முழு பயன் அடைய முடியும்.

சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களை தீர்க்கும் அபூர்வ பஞசநதன நடராஜர்

இக்கோவிலில் ஆசியாவிலேயே மிகவும் அரிதான, பஞசநதன கல்லில் செய்யப்பட்ட நடராஜர் திருமேனி அமைந்துள்ளது. இந்த கற்கள் சூரியனில் இருந்து வெளிவரும் ஆரோக்கிய கதிர்வீச்சினை சேமித்து வைத்துக் கொள்ளும் ஆற்றல் உடையன. இந்த வகை கற்சிலை தற்போது எங்குமே கிடையாது. சிறுநீரகம், மற்றும் சிறுநீரக கல் தொடர்பான நோய்களுக்கு இந்த பஞசநதனநடராஜர் மருந்தாக திகழ்கிறார்.

பஞசநதன நடராஜர் பற்றிய முந்தைய பதிவு

சிறுநீரக நோய்களைத் தீர்க்கும் பஞசநதன நடராஜர் (02.09.2022)

 https://www.alayathuligal.com/blog/k8kh7zclwjepxd7nzbsmfkn6pwtx7p?rq

12 ராசிகள், 27 நட்சத்திரங்கள்

நவக்கிரகங்கள்

 
Previous
Previous

திருபுவனம் கம்பகரேசுவரர் கோவில்

Next
Next

அய்யன்பேட்டை சுந்தரேசுவரர் கோவில்