பூவனநாதர் கோயில்

உயரமான திருமேனியுடைய செண்பகவல்லி அம்மன்

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி தலத்தில்தான், தமிழ்நாட்டிலேயே உயரமான திருமேனியுடைய செண்பகவல்லி அம்மன்(சுமார் 7 அடி உயரம்) அருள்பாலிக்கிறாள். மதுரையில் மீனாட்சி அம்மன் எப்படியோ, அதுபோல கோவில்பட்டியில், செண்பகவல்லி அம்மன் முக்கியத்துவம் பெற்று இருக்கிறார். பொதுவாக எல்லா கோயில்களிலும் மூல விக்கிரகம் எந்த நிலையில் உள்ளதோ அந்த நிலையிலேயே அலங்காரம் செய்வது வழக்கம். ஆனால் இந்த தலத்தில், நிற்கும் நிலையில் உள்ள அம்பாளை உட்கார்ந்து இருப்பது போல் அலங்காரம் செய்கிறார்கள். இந்த வழக்கம், இத்தலத்தின் சிறப்பு அம்சமாகும்.

படம் உதவி : திரு..அருண்குமார், கோவில்பட்டி

படம் உதவி : திரு..அருண்குமார், கோவில்பட்டி

Previous
Previous

ஆதிகேசவ பெருமாள் கோயில்

Next
Next

பலாசவனேஸ்வரர் கோவில்