௳ (முகப்பு)

View Original

பேரூர் பட்டீஸ்வரர் கோவில்

அசுவினி நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஞானபைரவர்

கோயம்புத்தூரில் இருந்து சிறுவானி செல்லும் வழியில் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பேரூர் பட்டீஸ்வரர் கோயில். இறைவன் திருநாமம் பட்டீஸ்வரர். இறைவியின் திருநாமம் மனோன்மணி, பச்சைநாயகி. இத்தலத்தை தரிசிப்போருக்கு இனி பிறப்பில்லை என்பது பொருள். ஆதிசங்கரர் தன் தாயின் முக்தி வேண்டி இங்கு பிரார்த்தனை செய்துள்ளார். சுந்தரமூர்த்தி நாயனாருக்காக நடராஜர் தமது தில்லை திருநடனத்தை காட்டியருளிய தலம் பேரூர்.

இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பைரவர் ‘ஞான பைரவர்’ என்று அழைக்கப்படுகிறார். இந்த பைரவருக்கு நாய் வாகனம் இல்லை. இது முக்தி தலம் என்பதால் பைரவர் வாகனம் இன்றி இருக்கிறார். ஞான பைரவர் வலது கையில் சிவனைப் போல் உடுக்கையையும், இடது கையில் பாசத்தையும் கொண்டுள்ளார். ஞான பைரவர் நின்ற கோலத்தில் உள்ளார். செவ்வாய்க்கிழமை மாலையில் பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி வழிபட்டால் நாம் இழந்த பொருள் எதுவாக இருந்தாலும் அது திரும்ப கிடைக்கும். மேலும் மேஷம், விருச்சிக ராசிக்காரர்கள் பைரவரை வழிபட உகந்த நாளாகும். செவ்வாய்க்கிழமைகளில் அஷ்டமி திதி இணைந்து வந்தால் சிறப்பு. ஆறு தேய்ப்பிறை அஷ்டமிகளில் பைரவரை சிவப்பு நிற அரளிப் பூவால் வழிபட்டு வந்தால் நற்பலன்கள் வந்தடையும்.

படங்கள் உதவி : திரு. அண்ணாமலை, கோயம்புத்தூர்

See this map in the original post