௳ (முகப்பு)

View Original

நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் கோவில்

தினம்தோறும் அன்னாபிஷேகம் செய்யப்படும் தலம்

கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்தில் கபினி ஆற்றின் கரையில் உள்ள நஞ்சன்கூடு என்ற தலத்தில் அமைந்துள்ளது நஞ்சுண்டேஸ்வரர் கோவில் . இறைவன் திருநாமம் நஞ்சுண்டேஸ்வரர். இறைவியின் திருநாமம் பார்வதி.

அனைத்து சிவன் கோவில்களிலும் சிவபெருமானுக்கு ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தன்று அன்னாபிஷேகம் நடைபெறும். ஆனால் இந்த கோவிலில் இருக்கும் லிங்கத்திற்கு தினம்தோறும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. விஷத்தன்மை கொண்ட அசுரன் ஒருவனை விழுங்கிய காரணத்தால் சிவபெருமான் இங்கு உக்கிரமான நிலையில் இருப்பதாகவும், அந்த உக்கிரத்தை தணிக்க தினம்தோறும் அன்னாபிஷேகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இது மட்டுமல்லாமல் இத்திருத்தலத்தில் சுக்கு, வெண்ணெய், சர்க்கரை இவை மூன்றையும் ஒன்றாகக் கலந்து 'சுகண்டித சர்க்கரை' என்ற பெயரில் பிரசாதமாக, சிவபெருமானுக்கு நைவேத்தியம் செய்து, பின்னர் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. நோய்களை குணப்படுத்தும் சக்தியானது இந்த சுகண்டித சர்க்கரைக்கு உள்ளதால் இந்த சிவபெருமானை 'ராஜ வைத்தியர்' என்ற மற்றொரு பெயர் கொண்டும் அழைக்கிறார்கள்.

இத்தலம் மைசூர் நகரத்திலிருந்து 23 கி.மீ. தொலைவில் உள்ளது.

See this map in the original post