௳ (முகப்பு)

View Original

காயத்ரிதேவி அம்மன் கோவில்

மூன்று அம்பிகைகளின் அம்சமாகத் திகழும் காயத்ரிதேவி அம்மன்

காயத்ரிதேவி அம்மனுக்கு முதன்முதலாக கோவில் எழுப்பப்பட்ட தலம் சிதம்பரம் ஆகும். இக்கோவிலில் மூலவர் காயத்ரிதேவி அம்மன் சன்னதிக்கு வலதுபுறம் விநாயகரும், இடதுபுறம் முருகனும் தனிச்சன்னதிகளில் எழுந்தருளியிருக்கிறார்கள். இவர்களுக்கு நடுவில் காயத்ரிதேவி அம்மன் ஐந்து முகங்களுடனும், பத்து திருக்கரங்களுடனும் தாமரை மலர் மேல் அமர்ந்து இருக்கிறாள். அவரது கரங்களில் கதை, அங்குசம், சங்கு, சக்கரம், தாமரைமலர், சாட்டை, கிண்ணம் ஆகியவற்றை ஏந்தியுள்ளார். பிரம்மா, விஷ்ணு, சிவன், காயத்ரி, சாவித்ரி ஆகிய ஐந்து கடவுளர்களின் வடிவமாக காயத்ரிதேவி அம்மன் திகழ்கிறாள். இவள் காலையில் காயத்ரி, மதியம் சாவித்திரி, மாலையில் சரஸ்வதியாக அருள்பாலிக்கிறாள் என்பது ஐதிகம். காயத்ரிதேவி அம்மனை வழிபட்டால் குழந்தைகளின் கல்வி சிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.