௳ (முகப்பு)

View Original

குறிச்சி அஷ்டதசபுஜ மகாலட்சுமி துர்க்கை கோவில்

நவபாஷாணத்தால் ஆன, முப்பெருந்தேவியரும் இணைந்த அபூர்வ துர்க்கை அம்மன்

பட்டுக்கோட்டை அறந்தாங்கி சாலையில் பட்டுக்கோட்டையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள குறிச்சி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது அஷ்டதசபுஜ மகாலட்சுமி துர்க்கை கோவில். இக்கோவிலில் எழுந்தருளி இருக்கும் அம்மன் முப்பெரும் தேவியரின் ஒருங்கிணைந்த வடிவமாகும். மேலும் அம்மனின் 12 அடி உயர திருவுருவானது நவபாஷாணத்தால் வடிவமைக்கப்பட்டது என்பது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும். இந்த அம்பிகைக்கு அஷ்டதசபுஜ (பதினெட்டுக் கை) மகாலட்சுமி துர்க்கை அம்மன் என திருநாமம் எழுந்தது.

அம்மன் திருமேனி உருவான வரலாறு

குறிச்சி கிராமத்தில் வசித்து வந்த தனராமலிங்கர் என்பவரிடம் அருகில் உள்ள பாலத்தளி கிராம மக்கள் துர்க்கை சிலை வடிவமைத்து கோயில் கட்ட ஆலோசனை கேட்டனர். அவர் கனவில் தோன்றிய துர்க்கை, சித்தர் ஒருவர் உன்னிடம் வருவார். அவரது ஆலோசனைப்படி சிலை செய்து வை என்று கூறினாள். அதன்படி ஓர் அமாவாசை நாளில் சித்தர் அவரிடம் வந்தார். நவபாஷாணத்தால் ஆன முப்பெருந்தேவியரும் இணைந்த 12 அடி உயர சிலை எழுந்தது. 18 கரங்களுடன் அமைந்த அந்த துர்க்காலக்ஷ்மி சிலையை ஒரே நாள் இரவில் வடித்தார். சிம்ம வாகனத்தில் அமர்ந்தது போல் அன்னை காட்சி தந்தாள். பின்னர் எதுவும் கூறாமல் தாம் கொல்லிமலை செல்வதாகக் கூறிச் சென்றார் சித்தர்.

பிரார்த்தனை

பதினெட்டுக்கை(அஷ்ட தசபுஜ) மகாலட்சுமி துர்க்கை அம்மனை வழிபட்டால் முப்பெரும் தேவியரை தனித்தனியே வழிபட்ட பலன் கிடைக்கும். தீராத நோய்கள் தீரவும், தொழில்துறையில் முன்னேற்றம் ஏற்படவும், திருமணத்தடை நீங்கி குழந்தைச் செல்வம் கிட்டவும், வேலை கிடைக்க வேண்டியும், கணவன் மனைவி பிரச்னை நீங்கி நிம்மதி கிடைக்கவும் அம்பிகையிடம் பக்தர்கள் வேண்டுகின்றனர்.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி  தேர் திருவிழா பற்றிய முந்தைய பதிவு (03.04.2023) 

https://www.alayathuligal.com/blog/g86afhe7flhwzhc65afmplw9a27xxc-f2hjx