௳ (முகப்பு)

View Original

திருச்சுழி திருமேனிநாதர் கோவில்

பச்சிலை மூலிகையால் உருவாக்கப்பட்ட அபூர்வ நடராஜர்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை என்ற ஊரிலிருந்து, 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருச்சுழி. பாண்டிய நாட்டில் உள்ள 14 தேவார தலங்களில் இத்தலமும் ஒன்று. இறைவன் திருநாமம் திருமேனிநாதர். இறைவியின் திருநாமம் துணைமாலையம்மை. இத்தலத்தில் பிரளய வெள்ளம் ஏற்பட்டபோது, ஒரு அம்பினால் சுழித்து அந்த வெள்ளத்தை பாதாளத்திற்குள் செலுத்தியதால், இந்த ஊர் 'திருச்சுழியல்' என்று அழைக்கப்பட்டது. ரமண மகிரிஷி பிறந்த இடம் இது.

இந்தத் தலத்தில் உள்ள நடராஜரின் திருமேனி கொள்ளை அழகுடன் திகழ்கின்றது. மிக மிக தத்ரூபமாக வடிக்கப்பட்ட இந்த நடராஜரின் விக்கிரகம் பச்சிலை மூலிகையால் உருவாக்கப்பட்டது என்பது இக்கோவிலின் தனிச்சிறப்பு. இப்படிப்பட்ட பச்சிலை மூலிகையால் உருவான நடராஜரை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.

See this map in the original post