௳ (முகப்பு)

View Original

மயிலாடுமலை சக்திவேல் முருகன் கோவில்

உலகிலேயே மிகப் பெரிய மூலவர் திருமேனியுடைய முருகன் கோவில்

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடியில் இருந்து, குடியாத்தம் போகும் வழியில் கே. வி. குப்பம் தாலுகா, மேல்மாயில் கிராமத்தில் உள்ள மயிலாடுமலையில் அமைந்துள்ளது சக்திவேல் முருகன் கோவில். இக்கோவிலில் முருகப்பெருமான் ஒன்பது அடி உயரத்தில், உலகிலேயே மிகப்பெரிய மூலவர் திருமேனியுடன், கருவறைக்கு உள்ளே கருவறை என்ற சூட்சுமமான அமைப்பில் எழுந்தருளி உள்ளார். மற்ற முருகன் கோயில்களில் இல்லாதவகையில் வள்ளி மற்றும் தெய்வானை அம்மன்கள் தனித் தனிச் சன்னதியில் அமைந்து அருள்பாலிக்கின்றனர்.

பிரார்த்தனை

இக்கோவிலில் முக்கிய நேர்த்திக்கடன் தேங்காய் கட்டுதல் ஆகும். வேண்டுதல் வைத்து தேங்காயில் அவர்களது பெயர் எழுதி கட்டினால் வேண்டியது நிறைவேறும் என்பது ஐதீகம்.

மயிலாடுமலை முருகன் கோவிலுக்கு படிகள் மற்றும் மலைப்பாதை சாலை வழியாகவும் செல்லலாம்.

See this map in the original post