௳ (முகப்பு)

View Original

அம்மன்குடி கைலாசநாதர் சுவாமி கோவில்

சாளக்கிராம கற்களாலான நிறம் மாறும் அதிசய விநாயகர்

தஞ்சை மாவட்டம் அம்மன்குடி கிராமத்தில் அமைந்துள்ளது கைலாசநாதர் சுவாமி கோவில். இக்கோவிலை முதலாம் ராஜராஜ சோழனின் படைத்தலைவரான கிருஷ்ணன் ராமன் பிரம்மராயன், கி.பி. 944-ல் நிர்மாணித்தார். கும்பகோணத்திற்கு 15 கி.மீ. தொலைவில் உள்ள இத்தலத்தை, உப்பிலியப்பன் கோவில் வழியாக சென்று அடையலாம்.

இங்குள்ள விநாயகர் சிற்பம் தெய்வீக சிறப்புடையது. இவரை கொங்கணச் சித்தர் 'தபசு மரகத விநாயகர்' எனப் போற்றுகின்றார். இந்த விநாயகர், கையில் தபசு மாலை ஏந்தி, நாகாபரணத்தை வயிற்றில் தாங்கி வழவழப்பான சாளக்கிராம கற்களால் ஆனவர். விநாயகரின் துதிக்கை அவரது உடலோடு ஒட்டாமல் துளையிட்டு சிற்பத்திறமையுடன் செய்யப்பட்டுள்ளது. இவரின் துதிக்கை, உடல் மீதே படாத வண்ணம் இருக்கும் அமைப்பானது சகல வளங்களையும், ஞானத்தையும் நமக்கு தரவல்லது,

இந்த விநாயகரின் மீது, சூரிய ஒளி காலையில் விழுகையில் பச்சை வர்ணமாகவும், மதியம் நீல வர்ணமாகவும், மீண்டும் மாலை வேளையில் பச்சை வர்ணமாகவும் இவர் நிறம் மாறி காட்சி தருகிறார். இந்த வினாயகர் வெளிச்சத்தில் ஒரு நிறமும், இருட்டில் ஒரு நிறமுமாக இருப்பார். வெளிச்சம் பட அந்த வினாயகரின் நிறம் வெள்ளையாக இருக்கும். சற்று மழைமேகம் திரண்டால் வினாயகரின் மேனி கருப்பாகி விடும். அந்தக்கல் நிறம் மாறுவதை கண்கூடாகப் பார்க்கலாம்.

இந்த கணபதியை அனைத்து சித்தர் புருஷர்களும் தொழுது இன்புற்றனர் என்கிறார் அகத்தியர்.

யாமறிந்த சித்தரெல்லாம் கேரளாந்தக

சதுர்வேத மங்களங்குடி நின்ற

தனித் துதிக்கையானை - சாளக்

கிராம மேனியனை சிசுவடிவான

அருணனோடு ஆடிப்பாடி தொழ

கண்டோமே

என அவர் போற்றி இருக்கிறார்.

நாக தோஷம் கொண்ட மனிதர்களுடைய தோஷம் நீக்க, பூமியில் பற்பல தலங்கள் உண்டு. ஆனால், தேவர்களுக்கு நாகதோஷம் நீங்க வேண்டுமாயின் அவர்கள் வழிபட வேண்டிய தலம், இந்த சாளக்கிராம விநாயகர் தலமாகும்.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு

நூறு கண்கள் கொண்ட துர்க்காதேவி

நினைத்த காரியம் நிறைவேற, சகல சௌபாக்கியங்களும் கிட்ட துர்க்கைக்கு திரிசதி அர்ச்சனை

https://www.alayathuligal.com/blog/i9hxgt6m44c9pfqzxwe6fnko51m88y

 

See this map in the original post