௳ (முகப்பு)

View Original

சுந்தரேஸ்வரர் கோயில்

பார்வதிதேவி மீனவ மகளாக அவதரித்த தலம்

காரைக்காலில் இருந்து பொறையார் செல்லும் சாலையில் சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேவாரத்தலம், திருவேட்டக்குடி. இறைவன் : சுந்தரேஸ்வரர்....

ஒருசமயம் கைலாயத்தில் பார்வதிதேவி சிவனிடம், ”உலகில் வாழும் உயிர்களுக்கு ஆதாரமாக நீங்கள் மட்டும் எப்படி இருக்க முடியும்? நான் இல்லாமல் உங்களால் தனித்து இயங்க முடியாதே!” என்றாள். அம்பாளின் ஆணவத்தை அறிந்த சிவன், அவளை பூலோகத்தில் மீனவப்பெண்ணாக பிறக்கும்படி செய்துவிட்டார். அதன்படி அம்பாள் இத்தலத்தில் மீனவக்குழந்தையாக பிறந்தாள்.
சிவன் மீது பக்தி கொண்டு இத்தலத்தில் தவமிருந்தாள். சிவனும், மீனவராக வந்து அம்பாளை திருமணம் செய்து கொண்டார். இந்த நிகழ்வின் அடிப்படையில் மாசி திருவிழாவின்போது, சிவனை மீனவர்கள் இங்கிருந்து தங்கள் பகுதிக்கு அழைத்துச்சென்று'மாப்பிள்ளை அழைப்பு' கொடுக்கின்றனர். அப்போது, மீனவர்கள் சிவனை,'மாப்பிள்ளை' என்றும் அழைக்கும் வழக்கமும் உள்ளது. இவரிடம் வேண்டிக்கொண்டால் திருமண தோஷங்கள் நீங்கும், விரைவில் வரன் அமையும் என்பது நம்பிக்கை.

See this map in the original post