௳ (முகப்பு)

View Original

திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் கோவில்

சோழர்களின் போர் தெய்வம் பிடாரி ஏகவீரி எனும் அஷ்டபுஜ காளி

கும்பகோணத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் கோவில். இக்கோவிலில், பிடாரி ஏகவீரி எனும் அஷ்டபுஜ காளி, அம்பாள் பெரியநாயகி சன்னதியின் வடக்குப் பகுதியில் எழுந்தருளி உள்ளார். இச்சன்னதியில், பிடாரி ஏகவீரி எனும் அஷ்டபுஜ காளி. உத்குடி ஆசனத்துடன், திருச் செவிகளில் விசேஷ குண்டலங்கள், கழுத்தில் சரப்பளி, கால்களில் சலங்கை, தொடைவரை மறைத்த சிற்றாடை என வீரமும் அழகும் நிறைந்த திருக்கோலத்தில் துடியாகக் காட்சி தருகிறான் பிடாரி ஏகவீரி. விஷ்பூர முத்திரையுடன், கனிவுடன்கூடிய கீழ்நோக்கிய பார்வையுடன் அருள்கிறாள் காளி. ஒருகாலத்தில் எல்லைத் தெய்வமாகத் தனிக்கோவிலில் திருவலஞ்சுழியில் அருள்பாலித்தவள் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். மகிஷாசுரனை வதம் செய்த காளிதேவி, ஈசனின் ஆணைப்படி இங்கு வந்து சிவபூஜை செய்தாள் என கோவில் புராணம் புராணம் கூறுகின்றது.

சோழப்பேர்ரசர்கள் ராஜ ராஜ சோழனும், அவன் மகன் ராஜேந்திர சோழனும் போர்க்களம் கிளம்பும் முன் இந்த மாகாளிக்கு வாள்,போர் ஆயுதங்களை வைத்து பூசை நடத்தி உத்தரவு வாங்கிய பின்னரே போர்க்களம் நோக்கிக் கிளம்புவார்கள். அவற்றின் மூலம் போரில் வெற்றி பெற்று இருக்கிறார்கள். இராஜராஜன், இராஜேந்திரன் போன்ற சோழப் பேரரசர்கள் கொண்டாடிய தெய்வம் இவள். 'ஏகவீரி' என்று அழைக்கப்பட்டதாக அன்றைய கல்வெட்டுகள் தெரிவிக்கிறது. இன்றைக்கு அஷ்டபுஜ காளி என்ற பெயர் மாற்றம் பெற்று இருக்கிறாள். இராஜராஜனின் மாமியார் குந்தணன் அமுதவல்லியார், இந்த காளிக்கு நிவந்தங்கள் வழங்கியுள்ளார்.

See this map in the original post