௳ (முகப்பு)

View Original

பழனிமலை தண்டாயுதபாணி கோவில்

ஆங்கிலேய அதிகாரியின் வயிற்று வலியை தீர்த்த பழனி ஆண்டவர்

பழனிமலை தண்டாயுபாணிக்கு, ஒரு நாளைக்கு ஆறு முறை அபிஷேகம் அலங்காரம் செய்யபடுகி றது. இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்து விடும். அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்து விட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது. தினமும் ஆறு காலங்களில் தண்டாயுதபாணி சுவாமி ஆறு அலங்காரத்தில் காட்சி தருகிறார். அந்த அலங்காரங்கள்

விளாபூஜை - காலை 6.40 மணிக்கு சன்யாசி அலங்காரம்

சிறுகாலசந்தி - காலை 8 மணிக்கு வேடர் அலங்காரம்

காலசந்தி - காலை 9 மணிக்கு பாலசுப்ரமணியர் அலங்காரம்

உச்சிகாலம் - பகல் 12 மணிக்கு வைதீகாள் அலங்காரம்

சாயரட்சைபூஜை - மாலை 5.30 மணிக்கு இராஜ அலங்காரம்

அா்த்தஜாம பூஜை - இரவு 8 மணிக்கு புஷ்ப அலங்காரம்

வெண்ணெய்யும், கோதுமை ரொட்டியும் நைவேத்தியம்

சிறுகாலச்சந்தி பூஜையின் போது ( காலை 8.00 - 8.30 மணி ) பழனி ஆண்டவருக்கு அபிஷேகம் முடிந்தபின் வேடர் அலங்காரம் செய்யப்படுகிறது. பழனி ஆண்டவருக்கு நைவேத்தியமாக மிளகு, சாம்பார்சாதம், வெண்ணெய், கோதுமை ரொட்டி படையலாகப் படைக்கப்படுகின்றது. அவருக்கு வெண்ணையும், கோதுமை ரொட்டியும் படைக்கப்படுவதின் பின்னணியில் அவர் ஒரு ஆங்கிலேய அதிகாரிக்கு அருள்புரிந்த நிகழ்ச்சி இருக்கின்றது.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பழனிப் பகுதியை நிர்வகித்த ஆங்கிலேய அதிகாரிக்குக் கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. வயிற்றுவலியைத் தீர்த்தருளுமாறு பழனியாண்டவரை அவ்வதிகாரி வேண்டிக் கொண்டார். வலி தீர்ந்தால்தாம் உண்ணும் உணவை பழனியாண்டவருக்குப் படைப்பதாகவும் வேண்டிக்கொண்டார். இறைவன் அவ்வதிகாரியின் தீராத வயிற்று வலியைத் தீர்த்து அருளினார். அன்று முதல் சிறுகாலபூஜையின்போது வெண்ணெய்யும், நெய்யால் சுடப்பட்ட கோதுமை ரொட்டியும் ஆண்டவருக்கு படையாலகச் சேர்த்துப் படைக்கப்படுகிறது.

பிரார்த்தனை

நெடுநாட்களாக முடியாமல் இழுத்தடிக்கும் வழக்கு தீராத நோய் போன்ற பிரச்சினைகள் தீர பழனி ஆண்டவரை, அலங்காரம் இல்லாத ஆண்டிக் கோலத்தில் தரிசிப்பது நல்லது. வீட்டில் நடைபெறப்போகும் திருமணம், வீடு விற்பது, வாங்குவது, கட்டுவது, கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்வுகளுக்கெல்லாம் ராஜ அலங்கார கோலத்தில் தரிசிக்கலாம்.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்

1. பழனிமலை தண்டாயுதபாணி தெய்வத்தின் சிறப்பு அம்சங்கள் (7.2.2023)

https://www.alayathuligal.com/blog/ew4ms4rhrdgp94td8k8h42ja9tlnt4-r42fn?rq

2. பழனி மலைக்கு அன்னக்காவடி எடுத்த சென்னைக் கவிஞர் (5.2.2023)

45 நாட்கள் சாதத்தை சூடாக வைத்திருந்த முருகனின் அருட் கருணை

https://www.alayathuligal.com/blog/ew4ms4rhrdgp94td8k8h42ja9tlnt4?rq 

ஆண்டிக் கோலம்

வேடர் அலங்காரம்

வேடர் அலங்காரம்

வைதீகாள் அலங்காரம்

இராஜ அலங்காரம்

See this map in the original post