௳ (முகப்பு)

View Original

குடுமியான்மலை சிகாநாதசாமி கோவில்

சிற்பக்கலையின் பொக்கிஷமாக திகழும் குடுமியான்மலை

புதுக்கோட்டை – கொடும்பாளூர் – மணப்பாறை சாலையில், புதுக்கோட்டையில் இருந்து, 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது குடுமியான்மலை சிகாநாதசாமி கோவில்.

10-ம் நூற்றாண்டில் திருநலக்குன்றம் என அழைக்கப்பட்டுள்ளது. பின்னர் சிகாநல்லூர் எனவும், தற்போது குடுமியான் மலை என்றும் அழைக்கப்படுகிறது.

நம் தமிழகத்தில், சிற்பத்திலும், கட்டிடக்கலையாலும் சிறப்பு பெற்ற கோவில்கள் பல உள்ளன. அவற்றுள் உலகப் பிரசித்தி பெற்ற கோவில் குடுமியான் மலை. இன்றும் உலகின் பல நாடுகளிலிருந்தும் ஆய்வுமாணவர்கள் குடுமியான் மலையில் காணப்படும் சிற்பங்களை ஆய்வு செய்த வண்ணம் உள்ளனர்.

குடுமியான்மலை ராஜகோபுரத்தை அடுத்து உள்ளே நுழைந்தால், மிக அற்புதமாகவும், நேர்த்தியாகவும் சிற்பக்கலையின் பெருமையை பறைசாற்றுவிதமாக அமைந்துள்ள ஏராளமான சிற்பங்களை நாம் காணலாம். இவற்றில் மகாவிஷ்ணுவின் தசாவதாரங்கள், ஆஞ்சநேயர், விபீடணன், வாலி, சுக்ரீவன் சிலைகள் காணப்படுகின்றன்.

இக்கோவில் வசந்த மண்டபத்தில் அமைந்துள்ள சிற்பங்கள் ஒவ்வொன்றும் மிகுந்த நுணுக்கமான வேலைப்பாடுகளும், அற்புதமான அமைப்புகளுடனும் காணப்படுகின்றன.

இங்குள்ள சிற்பங்களின் முகத்தில் காணப்படும் தெய்வீக அழகு, அவைகளின் கைவிரல்கள், கால்விரல்கள் போன்றவற்றில் அணிந்துள்ள அணிமணிகளின் நுணுக்கமான வேலைப்பாடு, அங்கங்களின் துல்லியமான அம்சங்கள், ஆபரணங்களின் சிறந்த அம்சங்கள், மேலும் அவை வெளிப்படுத்தும் காவியக்காட்சிகள், அனைத்திலும் பெருகியுள்ள பேரெழில் நம்மை மீண்டும், மீண்டும் வியந்து போற்றும் வண்ணம் உள்ளது.

சங்கர நாராயணர் சிலையில் ஒருபாதியில் சிவபெருமானையும், மறுபாதியில் நாராயணைனையும் அவரவர்களுக்குரிய அடையாளங்களையும் சிற்பி வேறுபடுத்தி காட்டியிருப்பது மிகுந்த நுணுக்கமான வேலையாகும்.

ஊர்த்துவ தாண்டவர் சிற்பத்தில் அவர்முகத்தில் ஆவேச பாவத்தையும், கோதண்ட ராமர் சிற்பத்தில் அவர் முகத்தில் சாந்த பாவத்தையும் வேறுபடுத்தி காட்டியுள்ள இச்சிற்பங்களின் பெருமைக்கு ஈடுஇணையே இல்லை.

மோகினி அவதாரம் குறித்த சிலையும், அதற்கு எதிர்புறம் பெண்சிலையும் உயரத்திற்கு தக்கவாறு மாறுபட்ட சாமுத்திரிகா லட்சணங்களை சித்தரிப்பது சிந்திக்க வேண்டிய செயலாகும்.

ரதி சிற்பத்தில் அவள் கையில் அணிந்திருக்கக்கூடிய மோதிரங்களில் ஒவ்வொன்றும் ஒவ்வோர் விதமாக அழகுபடுத்தப்பட்டு உள்ளது. மேலும் ரதியின் நெற்றிசுட்டு, காதணி, கழுத்தில் உள்ள நகைகள் உடலை மறைத்துள்ள மெல்லிய துணி போன்றவை மிகமிக சிறப்பாக செதுக்கப்பட்டுள்ளன.

பிரகாரத்தில் சுற்றி வரும்போது, சண்டிகேஸ்வரர் சன்னதிக்கு அருகில் ஒரு முகத்துடன் கூடிய இரு உடல் அமைப்பு. காண்போரை வியப்பில் ஆழ்த்தும். இதை செதுக்கிய சிற்பியின் கற்பனைத்திறன், நம்மை பிரமிக்க வைக்கின்றது.

இக்கோவில் சிற்பங்கள் அனைத்தும் மிக அற்புதமாகவும், நேர்த்தியாகவும் சிற்பக்கலையின் பெருமையை பறைசாற்றும் விதமாகவும் உள்ளன. சுருங்கச் சொன்னால் இக்கோவில், சிற்பக்கலையின் பொக்கிஷமாக திகழ்கின்றது. சிற்பக்கலை ரசிகர்களுக்கு, இக்கோவில் தெவிட்டாக விருந்தாக அமையும் என்பதில் ஐயம் இல்லை.

இந்தக் கோவிலை பற்றிய முந்தைய பதிவு

திருமேனியின் உச்சியில் குடுமியுடன் இருக்கும் அபூர்வ சிவலிங்கம் (16.09.2024)

https://www.alayathuligal.com/blog/kudimiyanmalai16092024

வாசகர்களின் கவனத்திற்கு

இப்பதிவில் வரைபடத்திற்கு (Map) கீழ் இடம் பெற்றுள்ள 'நுணுக்கமான சிற்பம்' என்று குறி சொல்லை கிளிக் செய்தால், முந்தைய பதிவுகளில் வெளியான நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட கோவில்களை பற்றிய தகவல்களைப் படிக்கலாம்.

விநாயகர்

முருகன்

ஊர்த்தவ தாண்டவர்

விஷ்ணுவின் மோகினி அவதாரம்

மகிஷாசுர மர்த்தினி

ராவணன்

ரதி

மன்மதன்

12 ராசி 27 நட்சத்திரங்கள்

ஒரு முகம்  இரு உடல்

See this map in the original post