௳ (முகப்பு)

View Original

அமிர்தகடேசுவரர் கோவில்

திருக்கடையூர் அபிராமி அம்மன்

திருக்கடையூர் ஸ்ரீஅமிர்தகடேசுவரர் உடனுறை ஸ்ரீஅபிராமி ஆலயம் மயிலாடுதுறை-தரங்கம்பாடி சாலையில், மயிலாடுதுறையிலிருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ளது,

ஆலயதத்தின் வெளிப்பிரகாரத்தில் இத்தலத்து நாயகி அபிராமி அம்மனின் சன்னதி கிழக்கு நோக்கியுள்ளது. அபயவரதத்துடன் கூடிய நான்கு திருக்கரங்களுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றாள்.

அபிராமி என்ற சொல்லுக்கு 'மேலான அழகுடையவள்' என்பது பொருள். அபிராமி அம்மன் காலசம்ஹாரரையும், ஸ்ரீஅமிர்தகடேசுவரரையும் விட பிரசத்தி பெற்றவள். சரஸ்வதிதேவியே அபிராமி அம்மனை பூஜை செய்து பலன் பெற்றாள் என்றால் அன்னையின் அருளளாற்றல் எத்தகையது என்று நமக்கு விளங்கும்.

அபிராமிப்பட்டருக்காக நிகழ்த்திய அற்புதம்

அபிராமிப்பட்டர் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் திருக்கடையூரில் வாழ்ந்தவர். இவரது இயற்பெயர் சுப்பிரமணியன். அபிராமி அன்னையின் மேல் மிகுந்த பக்தி கொண்டவர். எப்பொழுதும் அபிராமி சன்னதியில் அமர்ந்து அவளை துதித்து கொண்டிருப்பார். பிற சமயங்களில் நல்ல நாள்,நட்சத்திரங்களை குறித்து கொடுக்கும் பணியை செய்து வந்தார்.

ஒரு நாள் தஞ்சை மன்னன் சரபோஜி (கி.பி.1712 –1728)அபிராமி ஆலயத்திற்குவந்தான். மற்றவர் எல்லாம் மன்னனை வணங்கி நிற்க, அபிராமி பட்டரோ கண்ணை மூடி தியான நிலையில் அபிராமியின் பிரகாசமான முகத்தை மனக்கண்ணில் பாரத்து முகத்தில் மகழ்ச்சி பொங்க அமர்ந்திருந்தார். மன்னன், தனக்கு மரியாதை செய்யாது இருக்கும் அபிராமிபட்டரைப் பற்றி மற்றவர்களிடம் விசாரித்தான், அவர்கள் அபிராமிபட்டர் பஞ்சாங்கம் கணிப்பவர் என்றும் ஆனால் எப்பொழுதும் மதுப்போதையில் இருப்பார் என்றும் பொய் கூறினர்.

மன்னன் அபிராமிப்பட்டர் நாள் கணிப்பவர் என்பதால் அவரை எழுப்பி 'இன்று என்ன திதி' என்று கேட்டான். அபிராமியின் பௌர்ணமி போன்ற பிரகாச முகத்தை அதுவரை மனக் கண்ணில் தரிசித்துக் கொண்டிருந்ததால் சடடென்று 'இன்று பௌர்ணமி' எனறு கூறிவிட்டார். ஆனால் அன்று அமாவாசை திதி. அமாவாசை தினத்தை பௌர்ணமி என்று கூறியதால் கோபம் கொண்ட மன்னன் 'இன்று இரவு முழு நிலவு ஆகாயத்தில் தோன்றாவிட்டால் மரண தண்டணை' எனறு அபிராமிபட்டரிடம் கூறி விட்டான்.

மன்னன் கொடுக்கப் போகும் தண்டணையைக் கேட்டு அபிராமிப்பட்டர் மனம் உடைந்தார். உடனே அபிராமியை துதித்து அபிராமி அந்தாதி பாடத் தொடங்கினார். அவர் 78 பாடல்கள் பாடி முடித்தார். ஆனால் அபிராமியின் அருள் எதுவும் அவருக்கு அதுவரைக் கிடைக்கவில்லை. 'கயவர் தம்மோடு கூட்டினியே' என்று முடியும் 79 பாடலைப் பாடினார். இப்பாடலின் பொருள் 'உன்னையே எப்பொழுதும் வணங்கும் நான் துன்பப்படும்போது நீ ஏன் கயவர்களுக்கு துணையாய் இருக்கின்றாய்' என்பதாகும். இந்தப் பாடல் முடிந்ததும் அபிராமிப்பட்டர் முன் தோன்றிய அபிராமி 'உன் பக்தியை உலகுக்கு உணர்த்தவே இந்த நாடகம்' என்று கூறி தன் காதில் அணிந்திருந்த தாடங்கத்தை கழற்றி ஆகாயத்தில் வீசி எறிந்தாள். அது முழுநிலவை விட பன்மடங்கு பிராகசத்துடன் ஜொலித்தது.

தன் கவறை உணர்நத மன்னன் அவருக்கு 'அபிராமிபட்டர்' என்று பட்டம் அளித்தான். இந்த அற்புத நிகழ்ச்சியை ஒவவொரு வருடமும் தை அமாவாசையன்று அபிராமிபட்டர் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள்.

அபிராமியிடம் நாம் பெறக்கூடிய நற்பலன்கள்

நீண்ட ஆயுளை வேண்டுவோர் இத்தலத்து ஈசனை நாடி வருகின்றார்கள் என்றால் வாழ்கையில் துன்பப்பட்டு அதில் உழண்டு கொண்டிருப்பவர்கள் தம் துன்பங்கள் நீங்கி நற்பலன்கள் பெற நாடுவது, சகலவித செல்வங்களையும் வாரிவழங்கும் அன்னை அபிராமியைத்தான்.

அபிராமிப்பட்டர் இயற்றிய அபிராமி அந்தாதி என்னும் நூலில் நூறுபாடல்கள் உள்ளன. அதிலுள்ள ஒவ்வொரு பாடலும் அபிராமியிடம் நாம் பெறக்கூடிய நற்பலன்களை விவரிக்கின்றது. திருமணம், குழந்தைப்பேறு, வீடு, வாகனம், உத்தியோக உயர்வு, தெய்வ அருள் என்று ஒவ்வொரு பாடலுக்கும் சிறப்புப் பலன்கள் உண்டு.

அன்னை அபிராமி மிகவும் சக்தி வாய்ந்தவள். இவள் தன்னை வந்து வழிபடுபவர்களுக்கு செல்வ செழிப்பு, கல்யாண வரம், குழந்தை பாக்கியம், கல்வி கேள்விகளில் ஞானம் ஆகியவற்றை வாரி வழங்குகிறாள்.

ஆலயத்துளிகள் இணைய தளத்தில், சென்ற ஆண்டு நவராத்தரி முதல் நாளன்று வெளியான பதிவு

மயிலாப்பூர் கற்பகாம்பாள்

https://www.alayathuligal.com/blog/m8l7sr9dl79d9zh4zr7m6lpapkg6ln

See this map in the original post