௳ (முகப்பு)

View Original

ரங்கநாதர் கோவில்

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திவ்யதேசம்

வைணவர்களுக்கு கோவில் என்றால் அது ஸ்ரீரங்கத்தைத்தான் குறிக்கும்.ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் , ‘பூலோக வைகுண்டம்’ என்ற பெருமை பெற்றது. வைணவர்களின் 108 திவ்ய தேசங்களில்,ஸ்ரீரங்கம் முதன்மைத் தலமாகப் போற்றப்படுகின்றது.பன்னிரு ஆழ்வார்களில் 11 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஒரே திவ்ய தேசம் என்ற தனிச் சிறப்பைக் கொண்டது ஸ்ரீரங்கம்.