௳ (முகப்பு)

View Original

கார்த்திகை மாத அமாவாசையின் சிறப்புகள்

கார்த்திகை மாத அமாவாசையின் சிறப்புகள்

நமது வழிபாட்டில் அமாவாசை தினம் என்பது சிறப்பு மிக்கது. மாதத்திற்கு ஒரு முறை என அமாவாசை தினம் வந்தாலும், குறிப்பிட்ட சில மாத அமாவாசை தினங்களுக்கு தனிச்சிறப்புகள் உண்டு. அவற்றில் ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை, ஐப்பசி அமாவாசை, கார்த்திகை அமாவாசை ஆகியவை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். கார்த்திகை அமாவாசையை பெளமாவதி அமாவாசை என்றும் குறிப்பிடுவதுண்டு. கார்த்திகை அமாவாசை நாளில்தான் லட்சுமி தேவி, பூமிக்கு வருகை தருவதாக ஐதீகம். இந்த நாளிலேயே லட்சுமி தேவி, பாற்கடலில் இருந்து அவதரித்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன.

அமாவாசை தினங்களில் புனித நீர் நிலைகளில் நீராடி,இறந்த நம்முடைய முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் அளித்து வழிபடுபடுவது மரபு. ஆனால் கார்த்திகை அமாவாசை என்பது முன்னோர் வழிபாட்டுடன், ஆன்மிக வழிபாட்டிற்கும் மிக முக்கியமான நாளாகும்.

கார்த்திகை அமாவாசை அன்று அனுமனையும் செவ்வாய் பகவானையும் வழிபடுவதால் வாழ்வில் நாம் சந்திக்கும் பல விதமான துன்பங்களில் இருந்து விடுபட முடியும். கார்த்திகை அமாவாசை நாள் என்பது தேவர்களின் தலைவனான இந்திரன், சூரிய பகவான், அனுமான், முன்னோர்கள் ஆகியோரை வழிபட ஏற்ற நாள். இந்த நாளில் அனுமனை வழிபட்டால் எப்படிப்பட்ட கடன் பிரச்சனையில் இருந்தும் விடுபடுவதற்கு வழி கிடைக்கும். அதே போல் ஜாதகத்தில் மாங்கல்ய தோஷம் இருந்தாலும் அது நீங்கி விடும். அதிக கடன் பிரச்சனையால் சிக்கி தவிப்பவர்கள் இந்த நாளில் அனுமன் வழிபாட்டினை முறையாக மேற்கொள்வதால் கைமேல் பலன் கிடைக்கும். பித்ருதோஷம், சர்ப்ப தோஷம் உள்ளிட்ட தோஷங்களுக்காக பரிகாரம் செய்ய நினைப்பவர்கள் இந்த நாளில் செய்வது மிக சிறப்பானதாகும்.

இந்த தினத்தில் பசு, காகம் உள்ளிட்ட உயிரினங்களுக்கு உணவளிப்பதும், ஆதரவு இல்லாமல் இருக்கும் மக்களுக்கு அன்னதானம் செய்வதும் கோடி புண்ணியத்தை பெற்றுத் தரும்.

கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு வெளியான முந்தைய பதிவு

கார்த்திகை மாத அமாவாசையன்று கிணற்றில் கங்கை பொங்கும் அதிசயம் (04.12.2021)

சூரிய ஒளி கடிகாரம்

https://www.alayathuligal.com/blog/7fjgm5bdrbeybjlpp22ndrhh67can4