௳ (முகப்பு)

View Original

கும்பகோணம் ஏகாம்பரேசுவரர் கோவில்

சுமங்கலிகள் தங்கள் தாலியை அம்மனுக்கு நேர்த்திக் கடனாக செலுத்தும் கோவில்

கும்பகோணம் நாகேஸ்வரன் கீழவீதியில் அமைந்துள்ளது ஏகாம்பரேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் காமாட்சி. அம்பிகை ருத்திராம்சம் பொருந்தியவள் என்பதால், அம்பிகைக்கு முன் சிம்மத்திற்கு பதிலாக நந்தி இருக்கின்றது.

இக்கோவிலின் திருச்சுற்றில் இராகுகால காளிகா பரமேஸ்வரிக்கு தனியாக சன்னதி உள்ளது. சிவன் கோயிலாக இருந்தாலும் இங்கிருக்கும் காளிகா பரமேஸ்வரி சன்னதியிலேயே கூட்டம் அலைமோதுகிறது.சன்னதியின் முன்புறம் வலப்புறம் விநாயகரும், இடப்புறம் நாகமும் காணப்படுகின்றன. கருவறையில், அசுரனை வதம் செய்யும் கோலத்தில் எட்டு கரங்களுடன் அஷ்டபுஜ காளியாக கன்னிகா பரமேஸ்வரி வீற்றிருக்கிறாள். கத்தி, கேடயம் ஆகியவை கைகளில் உள்ளன. இந்த அம்மனுக்குத்தான் தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக ராகுகால வழிபாடு நடத்தப்பட்டது. செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிறு நாட்களில் ராகு கால நேரத்தில் பரமேஸ்வரி அன்னைக்கு விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன.

பிரார்த்தனை

ராகு கால காளிகா பரமேஸ்வரி மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் என்று பக்தர்கள் சிலிர்ப்போடு கூறுகின்றனர். கன்னிப் பெண்கள் நல்ல கணவன் அமைய, கன்னிகா பரமேஸ்வரியை வேண்டிக் கொள்கிறார்கள். தீராத நோய்களால் அவதிப்படும் தங்கள் கணவர் குணமாக வேண்டும் என்று பெண்கள் கன்னிகா பரமேஸ்வரியிடம் பிரார்த்தனை வைக்கிறார்கள். தங்கள் கணவர் குணமானபின், தாங்கள் வேண்டியபடி தங்கள் கழுத்திலுள்ள மாங்கல்ய நாணில் உள்ள தாலியையே கழற்றி உண்டியலில் போட்டு நன்றிக் கடன் செலுத்துகின்றனர். இப்படி தாலியையே அம்மனுக்கு நேர்த்திக் கடனாக செலுத்தும் பழக்கம் இந்த கோவிலில்தான் இருக்கின்றது. குழந்தை பேறு வேண்டும் பெண்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியதும் வெள்ளியில் செய்த சிறிய தொட்டிலை உண்டியலில் செலுத்தி தங்கள் நன்றியை தெரிவிக்கின்றனர்.

See this map in the original post