௳ (முகப்பு)

View Original

வியாக்ரபுரீஸ்வரர் கோவில்

சன்னதிகள் எதிர் எதிரே அமைந்திருக்கும் வித்தியாசமான வடிவமைப்பு

புதுக்கோட்டையிலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ள தலம் திருவேங்கைவாசல். இறைவன் திருநாமம் வியாக்ரபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் பிரகதாம்பாள்.

இக்கோவிலில் தெய்வ சன்னதிகள், வேறு எந்த தலத்திலும் நாம் காண இயலாத வகையில் அமைந்திருப்பது, கோவில் வடிவமைப்பில் ஒர் அபூர்வமாகும். இங்கு எந்த ஒரு சன்னதி இருந்தாலும், அங்கிருந்து மற்றொரு சன்னதியை பார்க்கும் விதத்தில் அமைந்துள்ளது. உதாரணமாக சிவன் சன்னதியிலிருந்து பார்த்தால் தேரடி விநாயகர் சன்னதியும், முருகன் சன்னதியிலிருந்து பார்த்தால் காலபைரவர் சன்னதியும், மகாவிஷ்ணுவின் சன்னதியிலிருந்து பார்த்தால் மகாலட்சுமி சன்னதியும் தெரியுமாறு அமைந்துள்ளன.

பொதுவாக எல்லா கோவில்களிலும் மூலவரை வணங்கிய பின்தான் பரிவார தேவதைகளை வணங்கும்படி அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இக்கோவிலில் முதலில் அம்பாள், பின்பு நவ விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, ராஜகணபதி, கஜலட்சுமி, பைரவர், பெருமாள், சூரியன், சனீஸ்வரன் ஆகியோரை வணங்கிய பிறகு கடைசியாக மூலவரான வியாக்ரபுரீஸ்வரரை வணங்கும்படியாக கோவில் அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு 

தவக்கோலத்தில் காட்சி தரும் முருகப் பெருமான் 

https://www.alayathuligal.com/blog/s2ymrhrk486l63psxj8et4h3g9f699

See this map in the original post