௳ (முகப்பு)

View Original

இரத்தினகிரீசுவரர் கோவில்

காகம் பறக்காத தேவாரத்தலம்

கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலையில் இருந்து சுமார் 11 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தேவாரத்தலம் திருவாட்போக்கி ஆகும். தற்போது 'ஐயர் மலை' என்று அழைக்கப்படுகிறது.

ஆயர் ஒருவர் இறைவனின் அபிஷேகத்திற்கு கொண்டு வந்த பாலை ஒரு காகம் கவிழ்த்து விட்டது. அவர் விட்ட சாபத்தால் அக்காகம் எரிந்து போனது. அதனால் அன்று முதல் இந்த மலையில் காகம் பறப்பதில்லை. மேலும் இம்மலைக்கு 'காகம் பறவா மலை' என்ற பெயரும் ஏற்பட்டது.

காலையில் குளித்தலை, மதியம் ஐயர்மலை, மாலையில் ஈங்கோய்மலை ஆகிய மூன்று தேவாரத் தலங்களையும் ஒரே நாளில் வழிபாட்டால் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம். அதனால் கார்த்திகை சோமவாரத்தில் இம்மூன்று கோவில்களையும் ஒரே நாளில் தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

See this map in the original post