௳ (முகப்பு)

View Original

திருக்கோடிக்காவல் கோடீசுவரர் கோவில்

பிரச்சனைகளை தீர்க்கும் கரையேற்று விநாயகர்

கும்பகோணம் - மயிலாடுதுறை சாலையில் ஆடுதுறைக்கு அருகேயுள்ள சூரியனார் கோவிலிலிருந்து 5 கி.மீ.தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் திருக்கோடிக்காவல். இறைவன் திருநாமம் கோடீசுவரர். இறைவியின் திருநாமம் திரிபுரசுந்தரி.

`திரிகோடி' என்றால், மூன்று கோடி என்று அர்த்தம். மூன்று கோடி மந்திர தேவதைகளுக்கு ஏற்பட்ட சாபம் இந்தத் தலத்தில் நீங்கியதால் `திருகோடிகா' என்று பெயர் உண்டாயிற்று. முக்தி வேண்டி மூன்று கோடி மந்திர தேவதைகள் இங்கே தவம் இருந்தனர். அப்போது காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, அனைவரும் விநாயகரைத் துதித்து வேண்டினர். அவரும் அவர்களைக் கரையேற்றி அருள் பாலித்தார். `மந்திர தேவதைகளை வெள்ளத்தில் இருந்து கரை ஏற்றியதால் இத்தல விநாயகர் கரையேற்று விநாயகர் என்ற பெயர் பெற்றார்.

அகத்தியர் மந்திர தேவதைகளுக்கு உபதேசித்து மணலால் விநாயகரைப் பிடித்து வைத்து பிரதிஷ்டை செய்தார். முக்கோடி மந்திர தேவதைகள் இந்த விநாயகரை சஹஸ்ர நாமத்தால் அர்ச்சனை செய்து பூஜித்தனர்.

கரையேற்று விநாயகர் இத்திருக்கோயிலில் தென் மேற்கு திசையில் அருள்பாலிக்கிறார். இன்றுவரை மணலால் ஆன இந்த விநாயகருக்கு அபிஷேகம் கிடையாது, எண்ணை மட்டுமே சாற்றி வழிபட்டு வருகின்றனர்.இவருக்கு ஆயிரம் மலர்களால் சஹஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட, எல்லாவிதமான சாபங்களும் தோஷங்களும் நீங்கும். இன்றைக்கும் நம் வாழ்க்கைக்கான கரையை, வழியைக் காட்டிக் கொண்டிருக்கிறார் இந்த பிள்ளையார். ஜன்ம வினைகள் நசிந்து, உயிர்கள் கடைத்தேற அருளுபவர் என்பதாலும், இவர் 'கரையேற்று விநாயகர் என்று போற்றப்படுகிறார். வாழ்வில் பிரச்னைகளால் தத்தளிப்போர் இத்தலத்து விநாயகரை வணங்கி வழிபட்டால் நலம் பெறலாம்' என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்

1. வெங்கடாஜலபதியாகக் காட்சி தரும் திரிபுரசுந்தரி அம்மன் (04.02.2022)

https://www.alayathuligal.com/blog/7ksafk9fd7fh2p8ylwhhkkxx3fnbyx

2. சனி பகவான் தலையில் சிவலிங்கம் (05.02.2022)

https://www.alayathuligal.com/blog/kb4zh7kmzms2hz3bnxjrr3rgs3z7aj

 3. சகல பாவங்களும் தொலைந்து போகும் திருக்கோடிக்காவல் (03.02.2022)

https://www.alayathuligal.com/blog/7tgz57xr5jf5l6b6j4rb2mz7wwz9xx

See this map in the original post