௳ (முகப்பு)

View Original

கழுவத்தூர் ஜடாயுபுரீஸ்வரர் கோவில்

பன்னிரண்டு ராசிகளின் மேல் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தியின் அபூர்வ கோலம்

மன்னார்குடியில் இருந்து பெருகவாழ்ந்தான் செல்லும் வழியில் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, கழுகத்தூர். ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவில் இறைவனின் திருநாமம் ஜடாயுபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் சவுந்திர நாயகி.

சீதையை ராவணன் கடத்திச் சென்றபோது பறவைகளின் அரசனான ஜடாயு அவனை மறித்தார். ராவணனோ அவரது இறக்கையை வெட்டி வீழ்த்தினான். காயத்துடன் கிடந்த அவர் ராமனிடம் ராவணன் சீதையைக் கடத்தி செல்லும் விஷயத்தைச் சொல்லி உயிர் விட்டார் அவருக்கு ராமன் ஈமக்கிரியை செய்து வைத்தார். ஜடாயு இந்தப்பகுதியில் தங்கியிருந்தபோது பூஜித்த சிவலிங்கத்திற்கு ஜடாயுபுரீஸ்வரர் என்ற பெயரும், தளத்திற்கு கழுகத்தூர் என்ற பெயரும் ஏற்பட்டது. பின்னர் கழுகத்தூர் மருவி கெழுகத்தூர், கழுவத்தூர் என்றானது.கெழுவம், சௌந்திரம் என்ற சொற்களுக்கு அழகு என்று பொருள். அம்பாள் பெயரால் ஊருக்கு கெழுவத்தூர் என்ற பெயரும் ஏற்பட்டது.

இந்தக் கோவிலின் பிரகாரத்தில் பன்னிரண்டு ராசிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட ராஜ சிம்மாசனத்தில் தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். இங்கு ஒரு ராசியைக் கூறி அர்ச்சனை செய்தால், பன்னிரண்டு ராசிகளுக்கும் அர்ச்சனை செய்த பலன் கிடைக்கும்.

See this map in the original post