௳ (முகப்பு)

View Original

மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவில்

கருவறை கதவிற்கு பூஜை நடக்கும் அம்மன் கோவில்

தேனி மாவட்டம் பெரிய குளத்திற்கருகில் தேவதானபட்டி என்ற கிராமம் உள்ளது. அங்குள்ள மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவில் வித்தியாசமானது. அந்தக் கோவிலின் கருவறையில் அம்மன் சிலை இல்லை. கருவறை மூடப்பட்டு கதவிற்குத்தான் பூஜை நடைபெறுகிறது. கதவிற்கு முன் நாகபீடத்தில் சூலம் வைத்து வழிபடுகின்றனர். கருவறைக்குப் பின்னால் ஒரு கூரை வீட்டில் மூங்கில் பெட்டிக்குள் காமாட்சி அம்மன் இருப்பதாக ஐதீகம். இந்தக்கோவிலில் உடைக்காத தேங்காயும் உரிக்காத வாழைப்பழமும் நிவேதனமாகப் படைக்கப்படுகிறது.

See this map in the original post