௳ (முகப்பு)

View Original

கல்விமடை திருநாகேசுவரமுடையார் கோவில்

இரண்டு மாதத்துக்கு ஒருமுறை நிறம் மாறும் அம்மன்

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே உள்ளது கல்விமடை . இந்தக் கிராமத்தில் கி.பி 10-ம் நூற்றாண்டை சேர்ந்த, மிகவும் பழமை வாய்ந்த, திருநாகேசுவரமுடையார் கோவில் உள்ளது. இறைவியின் திருநாமம் திருநாகேசுவரி.

இந்தக் கோவிலில் உள்ள அம்மன் விக்கிரகம் அற்புதமானது. அமாவாசை, பௌர்ணமி நாட்களில் அம்மன் விக்கிரகத்தின் கண்களில் பளிங்கு போன்று ஒளி வீசுகிறது. இரண்டு மாதத்துக்கு ஒருமுறை, அம்மன் விக்கிரகம் தானாக நிறம் மாறுகிறது. பச்சை, மஞ்சள், ஊதா ஆகிய நிறங்களில் அம்மன் நிறம் மாறுகிறது. அம்மனின் நிறம் மாறுவதைக் காண, ஏராளமான பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் இந்தக் கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.

இக்கோவிலில் புரட்டாசி மகாளய அமாவாசை திருவிழா விமரிசையாக நடைபெறுகிறது. அப்பொழுது மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளான சிவப்பெருமான் மற்றும் அம்பாளுக்கு மஞ்சள், திருமஞ்சனம், பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், சந்தனம், உள்ளிட்ட அபிசேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். பின்னர் சுவாமி-அம்பாளுக்கு வில்வம், ரோஜா, செவ்வந்தி, சாமந்தி, தாமரை, மரிக் கொழுந்து, முல்லை, மல்லி கை பூ உள்ளிட்ட சுமார் 2 டன் எடையுள்ள 11 வகையான மலர்களால் அபிசேகம் செய்து, அலங்கரிக்கப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெறுகிறது.

பிரார்த்தனை

இத்தலம் ராகு, கேது பரிகாரத் தலமாக விளங்குகின்றது. நன்றாக பணி செய்தும், சரியான மரியாதை கிடைக்காமல் இருப்பவர்கள் இங்கு வேண்டிக்கொண்டால் மன அமைதி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பணி உயர்வு, இடமாற்றம் வேண்டுபவர்களும் சுவாமியை வழிபடலாம். புத்திர பாக்கியம் இல்லாத பெண்கள் அம்பாளுக்கு வஸ்திரம் சாத்தி வளையல்கள் அணிவித்து வழிபடுகிறார்கள்.

புரட்டாசி மகாளய அமாவாசை - சுவாமிக்கு மலர்களால் அபிசேகம்

See this map in the original post