௳ (முகப்பு)

View Original

கீழைத்திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேசுரர் கோவில்

ஆறு சீடர்களுடன் காட்சி தரும் ராஜயோக தட்சிணாமூர்த்தி

சீர்காழியில் இருந்து சுமார் 10 கி.மீ.. தொலைவிலுள்ள தேவாரத்தலம், கீழைத்திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேசுரர் கோவில். இறைவன் திருநாமம் ஆரண்ய சுந்தரேஸ்வரர். இறைவியின் திருநாமம் அகிலாண்ட நாயகி.

இக்கோவிலில் சுவாமி சன்னதியின் சுற்றுச்சுவரில் தட்சிணாமூர்த்தி ஆறு சீடர்களுடன் வீற்றிருக்கிறார் பொதுவாக சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் ஆகிய நால்வருடன் மட்டும் காட்சி தரும் தட்சிணாமூர்த்தி, ஆறு பேருடன் காட்சி தருவது விசேஷம். இவர் "ராஜயோக தட்சிணாமூர்த்தி' என்று அழைக்கப்படுகிறார்.

உயர்ந்த பொறுப்பில் இருந்து பதவி இழந்தவர்கள், நியாயமாக செயல்பட்டும் பதவி உயர்வு கிடைக்காதவர்கள் ஆரண்யேஸ்வரருக்கும். தட்சிணாமூர்த்திக்கும் வஸ்திரம் அணிவித்து பூஜை செய்து வழிபடுகிறார்கள் இதனால் இழந்த பதவி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்

 1. நண்டு விநாயகர் (10.03.2022)

 https://www.alayathuligal.com/blog/6e982d6bn6xe7amw9rhx4nw73hhf37?rq=%20Keezhai%20

 2.ஒரே சிவலிங்கத்தில் இரண்டு பாணங்கள் (25.02.2022)

 https://www.alayathuligal.com/blog/pfxejz5ezmglhak5n2pbfrxb6pll9a

See this map in the original post