௳ (முகப்பு)

View Original

தலத்தின் தனிச்சிறப்பு

பெரிய கருவறை உடைய சிவாலயங்கள்

பொதுவாக கோவில்களில் கருவறையானது ஒரிரு அர்ச்சகர்கள் நின்று தெய்வத்தை பூஜிக்கும் அளவிற்குத்தான் அமைந்திருக்கும். ஆனால், தேவாரப் பாடல் பெற்ற தலங்களான கும்பகோணத்திற்கு அருகே உள்ள இன்னம்பரிலும், பூம்புகார் அடுத்த உள்ள புஞ்சையிலும் ஒரு யானை உள்ளே சென்று வழிபடக் கூடிய அளவில் கருவறை உள்ளது.இத்தகைய பெரிய கருவறை வேறு எந்த சிவாலயத்திலும் இல்லை என்பது இந்தத் தலங்களின் தனிச் சிறப்பாகும். யானை சென்று வழிபடும் அளவு கருவறையை உருவாக்கியது, சோழர்களின் பார்போற்றும் கட்டிடகலை சிறப்பாகும்.