௳ (முகப்பு)

View Original

நரிக்குடி எமனேஸ்வரர் கோவில்

மரண பயம் போக்கும் எமனேஸ்வரர்

கும்பகோணத்துக்கு அருகில் உள்ள குரு பரிகாரத் தலமான ஆலங்குடிக்கு தெற்கே 3 கி.மீ. தொலைவில் உள்ளது நரிக்குடி. இத்தலத்து இறைவன் திருநாமம் எமனேஸ்வரர். இறைவியின் திருநாமம் எமனேஸ்வரி. இந்த தலத்தில், எமன் தர்ம நெறிப்படி ஆண்டு, சிவபெருமானை வழிபட்டதால் 'நெறிக்குடி' என்று பெயர் பெற்றதாகவும். அதுவே மருவி நரிக்குடி என்றானது. பண்டைக் காலத்தில், இத்தலம் யமபுரி, யமபட்டினம், யமனேஸ்வரம், யமதர்மபுரம் என்ற பெயர்களுடன் விளங்கியது.

மனிதர்கள் ஒவ்வொருவரும் வாழ்வில் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு, சூரிய சந்திரர்கள் சாட்சியாக எமதர்மராஜா முன்னிலையில் சிதரகுப்தரால் அகர சந்தானி என்ற ஏட்டில் பதியப்பட்டு வருவதாக ஐதிகம். இத்தகைய சித்ரகுப்தப் பதிவேடு அர்ப்பணிப்புத் தலங்களில் ஒன்றாக நரிக்குடியும் சொல்லப்படுகிறது. மரண பயம் போக்குவதற்கான வழிபாட்டை செய்வதற்கு உரிய தலம் இது.

இத்தலத்தில், மரணபயத்தைக் களையவும். விபத்தினைத் தடுக்கவும். தற்கொலை எண்ணத்தைப் மாற்றவும் மிருத்யுஞ்சய மந்திரங்களும், யாகங்களும் செய்யப்படுகின்றன.

'த்ர்யம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டிவர்த்தனம் வர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முஷீய மாம்ருதாத்' என்ற மிருத்யுஞ்ஜெய மந்திரத்தை உச்சரித்தபடி அமாவாசை, பௌர்ணமி தினங்களில் எம தீர்த்தக் குளத்தை வலம் வந்து, எமனேஸ்வர சுவாமி, எமனேஸ்வரி அம்பிகைக்கு அர்ச்சனை செய்கிறார்கள். தெற்கு திசை தேவதையான எமதர்மராஜனுக்கு. அவருக்குரிய நீலநிற பருத்தித் துணியில், காய்ந்த கண்டங்கத்திரி வேர். அதிமரம், வசம்பு, சுக்கு துண்டுகளை வைத்து முடிச்சு போட்டு, எள்தீபத் திரிபோல உருவாக்கி நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் கலப்பில் தீபம் ஏற்றி வணங்குவது நல்லது. இவ்வாறு செய்தால், கண் திருஷ்டி, மன உளைச்சல், எமபயம் ஆகியவை அண்டாது என்பது ஐதீகம்.

புற்றுநோய், இருதய நோய் ஆகியவைகளை குணப்படுத்தும் கண்டகி தீர்த்தம் எனப்படும் எம தீர்த்தம்

இக்கோவில் திருக்குளம் எம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இத்திருக்குளம், நேபாள நாட்டில் ஓடும் புனித கண்டகி நதியின் சூட்சுமமான நீரோட்டப் பிணைப்பைக் கொண்டதால், இதற்கு கண்டகி தீர்த்தம் என்ற வேறு பெயரும் உண்டு. இந்த கண்டகி தீர்த்தம் விசேஷ மருத்துவ குணம் உடையது. இந்த தீர்த்தத்தின் மகிமையினால், புற்றுநோய் கட்டி கரைந்து விடும். இருதய அறுவை சிகிச்சை தேவை என்று பரிந்துரை செய்யப்பட்டவர்களுக்கு, அந்த அறுவை சிகிச்சை இல்லாமல் நோய் குணமாகும். எமவாதனை அகலும். சரிவர பேச இயலாத குழந்தைகளுக்கு, முழுமையான பேச்சுத்திறன் வரும்.

தீரா நோயை தீர்க்கும் கண்டகி தீர்த்தம்

See this map in the original post