௳ (முகப்பு)

View Original

சத்தியவாகீசுவரர் கோயில்

செவிசாய்க்கும் பிள்ளையார்

திருச்சிக்கு அருகில் இருக்கும் தேவாரப் பாடல் பெற்ற அன்பில் தலத்தில், பிள்ளையார் செவிசாய்த்துக் கேட்கும் நிலையில் இருக்கிறார. கொள்ளிடத்துத் தென்கரையில் நின்று திருஞானசம்பந்தர் பாடிய பாடல்களைச் செவிசாய்த்துக் கேட்டதால், இவ்விநாயகர் 'செவிசாய்க்கும் பிள்ளையார்' எனப் பெயர் பெற்றார். பக்தர்களின் குறைகளைச் செவிசாய்த்துக் கேட்டுத் தீர்த்து வைப்பார் என்பதும், இப்பெயர் வரக் காரணமாகும்.